Monday, December 19, 2011

விடைபெறுகிறேன் !



ன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து
நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

ந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

ன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

றவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

ன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

ப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

வி
டைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Monday, November 21, 2011

அன்புள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு ...

Photo Courtesy: http://www.nilacharal.com

குறிப்பு: ஏழாம் அறிவு திரையிடப்பட்ட போது எழுதியது! இப்பொழுது தலைவர் துப்பாக்கியில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டார்.


ன்புள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு ,


அடியேன் தமிழன் எழுதிக் கொள்வது . " ஏழாம் அறிவு " பார்த்தேன்; தமிழன் பெருமை சொல்வதற்காக எடுத்த படம் வேற்று மொழிகளில் தடம் மாறியிருந்தது. உங்கள் ரசிகன், தமிழன், கலைஞன் என்ற முறையில் உங்கள் முன் சில கேள்விகளை நான் கேட்க விழைகிறேன். எங்கேனும் இக்கேள்விகளை நீங்கள் கடக்க நேர்ந்தால் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.

  • தமிழ்ப்பெண் ஸ்ருதி நாவில் "தமிழ்" வரவில்லை. 'தமில்' என்று சொல்லும் ஒருவரை தமிழின் பெருமைப்பற்றிப் பேச வைத்தது அழகா ? கமலின் மகள் என்பதற்காக தமிழைக் கொலை செய்வதற்குத் தாங்கள் அனுமதிக்கலாமா ? தங்கக் கத்தியால் குத்தினால், தமிழுக்கும், தமிழனுக்கும் வலிக்காதா என்ன ?
  •  ஒரு மனிதனக்கு அப்பாவிடமிருந்து பாதி DNAக்களும் அம்மாவிடமிருந்து மீதி DNAக்களும் வரும் பொழுது, பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதிதர்மன் DNAவோடு , அரவிந்தின் DNA 80 % மேல் பொருந்தியிருப்பது எவ்வாறு அறிவியலில் சாத்தியமாகும் ? 
  • தமிழ் மொழியில் வெளியான படத்தில், அறிஞர்கள் அவையில் தமிழில் பேச விரும்பும் ஸ்ருதி , தெலுங்கு மொழியில் வெளியான படத்தில் தெலுங்கில் பேச விரும்புவதன் உள்நோக்கம் என்ன ? இதில் நீங்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள் ... தமிழர்களையா ? இல்லை இந்தியர்களையா ?
  • இதே படம் இலங்கையிலும் வெளியானது . உண்மைத் தமிழனாகத் தாங்கள் இருந்திருந்தால், தாங்கள் ஏழாம் அறிவை இலங்கையில் திரையிட அனுமதித்திருக்கக் கூடாது. மேலும், " ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரம் இல்லை துரோகம். " போன்ற வசனங்களை இலங்கை அரசு நீக்கிய பொழுதாவது , தாங்கள் சிந்தித்திருக்க வேண்டாமா ?
  • ஒரு சீனத்து இளைஞன் தமிழகத்தில் அவன் இஷ்டத்துக்கு அடிதடி விளையாட்டுகளை அரங்கேற்றும் பொழுது தமிழக போலீஸ் என்ன பாப்கார்ன் தின்று கொண்டா இருக்கும் ? கொஞ்சம் யோசிங்க நண்பா !

" ஏழாம் அறிவு " முருகதாசின் ஆறாம் அறிவை பணம் வந்து தின்று ஐந்தறிவாக மாற்றி விட்டதே என்ற எண்ணம் எனக்கு மட்டும் தோன்றவில்லை; தமிழை நேசிக்கும் பல தமிழர்களுக்கும் தான் ...


அன்புடன்,
உங்கள் ரசிகன் ( தமிழன் ).

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, November 20, 2011

கை நழுவிய நளனும் நந்தினியும் !



குறிப்பு: சில பல மாதங்களுக்கு 'நளனும் நந்தினியும்' இயக்குனர் வெங்கடேசன் அவர்களை அழைத்தேன். பாடல் குறித்து விவாதித்தோம். இசை கொடுக்கப்பட்டது. பாடல் எழுதப்பட்டது. ஆனால், காரணங்கள் சிலவால்  வாய்ப்பு கை நழுவியது. அந்த வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு இந்த வரிகள் பிடித்திருக்கிறதா ?


ன்னவோ சொல்லுற உந்தன் கண்ணால
என்னத்தான் கொல்லுற உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )

ழையடிக்குது குளிரடிக்குது
மனசுக்குள்ள புயலடிக்குது .
படபடக்குது துடிதுடிக்குது
இதயம் ரெண்டும் சலசலக்குதுவே ! ( கோரஸ் )

பூ மிதிச்சு வண்டு சாகுதே !
தேன் குடிக்க மனசு ஏங்குதே !
விழியிலது மொழிகளது
நூறுகோடி உள்ளதே !
மௌனமது போதுமது
காதல் பேய் கொல்லுதே ! ( ஆண் )

பூ மிதிச்சு வண்டு அது சாகும் கதையிலே !
தேன் முடிஞ்சா பூ கசக்கும் காதல் உலகிலே !
விழியில் என்ன மொழிகள் உண்டு ? பொய் சொல்லுற !
பல பொய்கள் சொல்லும் காதலுக்கு பேய் தேவல !  ( பெண் )


ன்னவோ செய்யுற  உந்தன் கண்ணால
என்னத்தான் நெய்யுற  உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, October 16, 2011

மருத்துவக்கல்லூரி மர்மங்கள் !

 
" மருத்துவமனைகளெல்லாம்
மரணத்திற்கு எதிராக பொய்யாகவே போராடிக்கொண்டிருக்கின்றன! "

வைரமுத்துவின் ஆழமான வரிகள்; உண்மை வரிகளும் கூட ! மருத்துவமனைகள் கோவிலாக போற்றப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், அதன் இன்றைய சூழலோ சற்று கேள்விக்குரியது தான். பணம் படைத்தவனுக்கு தனியார் மருத்துவமனைகள் எனவும், தினம் உழைப்பவனுக்கு அரசு மருத்துவமனைகள் எனவும் எழுதப்படாத சட்டம், நம் இந்திய திருநாட்டில் நடைமுறையில் உள்ளது, அதற்கு தமிழக மருத்துவமனைகள் மட்டும் விதிவிலக்கல்ல !

ரூ.400 கூட மாதச்சம்பளம் வாங்க முடியாத ஏழைத்தமிழனிடம் லஞ்சம் பிடுங்கப்படுகிறது நானூறுக்கும் மேலாக. இதைச் செய்பவர்கள் கல்லூரி முதல்வர்களோ, மருத்துவக் கண்காணிப்பாளர்களோ, துறைத்தலைவர்களோ அல்ல  தூக்குப்படுக்கைத் (Stretcher ) தள்ளுபவர்களும் சக்கர நாற்காலி ( Wheel Chair ) தள்ளுபவர்களுமான கடைநிலை ஊழியர்கள் (MNA - Male Nursing Assistant & FNA - Female Nursing Assistant ). தற்பொழுதைய நிலவரப்படி அவர்களின் விலைப்பட்டியல் இதோ உங்கள் முன்.

  • Stretcher அல்லது Wheel Chair  தள்ள - ரூ.450
  • Wound Dressing செய்ய - ரூ.50
  • இதர உதவிகளுக்கு - ரூ.50  முதல் ரூ.500 வரை .

ப்படியாக ஒரு நாளைக்கு தோராயகமாக பத்து நோயாளிகளை அறுவை அரங்கத்தில் இருந்து படுக்கை பிரிவிற்கு மாற்றுவதற்கு ரூ.4500 லஞ்சமாக வாங்கப்படுகிறது. அதோடு இவர்களுக்கு அரசு அளிக்கும் சம்பளம் ரூ.10 ,000க்கு மேல். மேலார்ந்த பெரியவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய சம்பள விவரங்கள்.
  • பயிற்சி மருத்துவரின் மாதச்சம்பளம் - ரூ.7400
  • முதுகலை மாணாக்கரின் மாதச்சம்பளம் - ரூ.30,000

டித்த மருத்துவர்களைக் காட்டிலும் இவர்களின் சம்பளமும், அதிகாரமும் அரசு மருத்துவமனைகளில் அதிகம் தான்.

ண்மையில் இரண்டு ஊழியர்களை ஏதோ ஒரு அரசு மருத்தவமனையில் லஞ்சம் வாங்கியதற்காக தற்காலிகமாக பணியில் இருந்து அக்கல்லூரியின் மருத்துவக்கண்காணிப்பாளர் நீக்கியுள்ளார். இது வரவேற்க வேண்டியது என்றாலும், இத்தகைய லஞ்சப்பேர்வழிகளைக் களைய மருத்துவமனைகள் யாதொரு நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது வருத்தமே !

குறைகளைக் கண்டுகொள்ள வேண்டிய நிர்வாகம் , காங்கிரஸ் ஆட்சி போல் மௌனம் காத்தால் மக்களின் நலம் தான் வீணாகும். இதில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அதோடு சற்று வருத்தமும் தருவது அந்த ஊழியர்கள் உபயோக்கிக்கும் வார்த்தைகள் ! நோயாளிகளின் உறவினர்களிடம் நோயாளிகளை அறுவை அரங்கத்திற்கு செல்லும் முன் காண்பித்து, " அங்க பார்தீங்கள ! ரெண்டு பெரிய டாக்டர் , ரெண்டு சின்ன டாக்டர் , ரெண்டு நர்ஸ் ... நீங்க தர காசு எல்லாம் இவங்களுக்கு தான் போகுது ! எல்லோரும் வாங்கின பிறகு எங்களுக்கு மிஞ்சுறது ஏதோ அஞ்சோ பத்தோ தான் ! " இதில் யார் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பது கூடவா தெரியாமல் சுழல்கிறது மருத்துவ உலகம்.

க்கள் சமுதாயத்தின்கண் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலமாகவும், அதிகாரம் பொருந்தியவர்கள் அடங்கி போகாமல் இருப்பதாலும் இதைக் களைய முடியும், கண்ணீரைத் துடைக்க இயலும். சிந்திக்க வேண்டியது நம் அனைவர் கைகளிலும் உள்ளது. இதனை எடுத்துரைக்க மருத்துவன் என்ற பட்டம் தேவையில்லை ; மனிதன் என்ற உணர்வு இருந்தால் போதும். விழித்திடு தமிழா !


" உயிரைக் காக்கும் உன்னத சாலையில்;
உழைப்பை உறுஞ்சும் ஊழல் வேர்கள். "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





Tuesday, October 11, 2011

நட்பின் புதைகுழியில் !



தேவதையே !
நட்புத் தாரகையே !
காதல் தேவையோ ? - பொய்க்
காதல் தேவையோ ?

ழியெங்கும் நட்பின் சருகுகள்
மனமெங்கும் மிதிக்கும் உணர்வுகள்.
விழியெங்கும் காதல் அரும்புகள்
தினந்தோறும் மலரும் கனவுகள்.

ட்பின் காகிதம் கொடுத்து
காதல் எழுதிக் கொண்டோம்.
நட்பின் விரல் பிடித்து
காதல் பழகிக் கொண்டோம்
நட்பின் மலர் கொடுத்து
காதல் தொடுத்துக் கொண்டோம்
நட்பின் கைக்குட்டை வாங்கி
காதல் துவட்டிக் கொண்டோம்.
நட்பைப் புதைத்து விட்டு
காதல் பெற்றுக் கொண்டோம்.


காதல் தோழியே !
நட்பு மழை தந்தது;
காதல் துளி தந்தது.
நட்பு வயல் தந்தது;
காதல் நெல் தந்தது.
நட்பு தாகம் தீர்த்தது;
காதல் தாகம் தந்தது.

நாம்
நட்பு கிழித்துக்
காதல் உடுத்திக் கொண்டோம்.
காதல் கிழித்துக்
காமம் உடுத்திக் கொள்வோம்.

நாம்
கண்ணீர் குடித்து
தாகம் தீர்த்துக் கொண்டோம்.
கண்ணை விற்று
காட்சி வாங்கி வருவோம்.

ம் தோழி !
நம்முள் காதல் பிறந்திருக்கிறது ;
காதல்
காமம்
காயம்
மூன்றும் முளைத்திருக்கிறது
நட்பின் புதைகுழியில் !!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Monday, October 10, 2011

என்றோ சிந்தித்தவைகள் !

  •  காதலில் அழகாய் தோன்றும் அத்துனை விசயங்களும் ... நட்பில் அபத்தமாய் காட்சியளிக்கிறது.
  • தீக்குளித்து தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பது அறிவாளிகளின் முட்டாள்தனம்; அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் .
  •  எல்லா பெண்களும் சுதாரிப்பு என்கிற பெயரில் " அண்ணா ! " என்று அழைக்கிறார்கள் . # இல்ல தெரியாமாத் தான் கேக்குறேன் நாங்க என்னிக்காவது உங்கள "அக்கா" னு கூப்பிட்டிருக்கோமா ?
  • நீண்ட நாளாக ஒரு சந்தேகம் ! அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ?
    # ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
  •  காதல் செய்யாதீர்கள்; மீறியும் காதல் செய்தால் காதலைக் கொலை செய்யாதீர்கள்
  • தனது தவறுகளை முழுவதுமாக மறைக்கத் தெரிந்தவன் அறிவுரைகள் சொல்கிறான்; தெரியாதவன் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிறான்.
  • இளமையைக் காட்டிலும் முதுமை அழகு. இளமையின் அழகு இருக்கும் வரை; முதுமையின் அழகு இறக்கும் வரை .
  • 'நான் அழகாக இல்லை' என என்னை பலர் விமர்சித்திருக்கிறார்கள் என மனம் நோகும் படி. அழகை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் விபச்சாரிகள் ; நான் விபச்சாரம் செய்ய விரும்பவில்லை.
  • மருத்துவர்களாகிய எங்களுக்கு மருந்துகளை மட்டுமே அறிமுகம் செய்கிறார்கள்; மனிதர்களின் உணர்வுகளை அறிமுகம் செய்ய மறந்து விடுகிறார்கள்.
  • புத்தகம் ஒன்று தான் ! ஆனால், வயதுக்கேற்ப அதன் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது.
  • உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ; உன்னையும் சேர்த்து ...
     
     - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
      

Saturday, October 8, 2011

பேருந்தில் தேவதை

Copyright : fotocommunity.com

பேருந்து நெரிசலில்
பக்கத்து இருக்கையில்
பளிச்சென்று தேவதை
பக்கத்தில் அவள் அன்னையோடு !

னியே சிரிக்கிறாள்
கேசம் கலைக்கிறாள்
கைநீட்டி அழைக்கிறாள்
மழலை மொழிகிறாள்
முத்தம் தருகிறாள்
கைபிடித்து இழுக்கிறாள்.

க்கம் பார்க்கிறாள்
கன்னத்தில் அறைகிறாள்
காதல் சொல்கிறாள்
கண்களில் கொல்கிறாள்

டைசியில் கேட்கிறாள் ...
" நான் UKG .... நீ ? "     


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, September 18, 2011

கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !

புத்தகம் 

Copyright : http://wallpaper4free.org

னக்கான வார்த்தைகள் மட்டும் சேர்த்து - ஒரு
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !

பசுமையாய் அவள்

Copyright : http://www.desktopwallpaperhd.net

காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் ! 


முதல் எழுத்து 

Copyright : besthomedecorators.com
யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.


ஒற்றை ரூபாய் 

Copyright : www.sparkthemagazine.com


ன்பே!
ஒற்றை ரூபாயாக 
உன் காதல் - நீ 
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது 
என் காதல்.

பின் குறிப்பு : * இத்தல் நிகழ்வு
                          ** இத்தல் நிகழ்வு.

உதடு 

Copyright : webs.com


ன்பே ! நீ 
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, September 13, 2011

களவாடிய கவிதைகள் !

Photo Courtesy : http://desigg.com

த்தி பூத்தாற்போல்
ரிதாய் பூக்கிறது 
அழகுப் பெண் பூக்கள்
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.

புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.

க்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...

யிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.

லர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?

காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்

லர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
கல்லறையில் சேர வேண்டும் - இல்லையென்றால்
கசங்கித்தான் தீர வேண்டும்.
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?

லர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.

காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Monday, September 5, 2011

நானாகிய நான் !

Copyright : Sathyaseelan

ன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .

றிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...

நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.

வி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.

நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .

நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....

உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?

வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் .... 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 


தொடும்தூரம் நீயில்லை !

Copyright : .tumblr.com
பல்லவி: 
தொடும்தூரம் நீ இல்லை ;
தொலைதூரம் தான் தொல்லை.
தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம்
தொட்டுப் பார்க்கிறதடி உன் கொலுசு.

சரணம்:1
முத்தம் கேட்டு இம்சித்ததில்லை - உன்னை
சத்தம் போட்டு வைததுமில்லை.
நித்தம் உன்னை நினைத்ததுமில்லை - நின்னை
நினைக்காத நாள் என் வாழ்விலில்லை.

சரணம்:2
முகம் பார்த்து பேசியதில்லை;
முகப்புத்தகத்திலும் பேசியதில்லை.
முல்லைப் பூவடி உன்னுதடு;
முத்தம் கேட்டு வாடுதடி என்னுதடு.

சரணம்:3
காலம் பிரித்து வைத்த காதல்;
காயம் தந்து வைத்த காதல்.
காமன் எட்டி நின்ற காதல்;
காலன் விட்டு நின்ற காதல்.

சரணம்:4
றக்கும்வரை காதல் வாழ்வதில்லை;
இறந்தபின்பு காதல் சாவதில்லை. - நான்
இருக்கும் நொடி காதல் வீழ்வதில்லை - உன்னை
எரிக்கும்நொடி காதல் காதலில்லை.


 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, September 3, 2011

தெரியாத முகங்களே !



தெரியாத முகங்களே !
தெரிகின்ற முகங்களே!
உண்மை தேடும் உணர்வில்லா விழிகளே !

ருக்கின்ற இறைவன் இருப்பது புரியுமோ ?
எரிக்கின்ற நாட்கள் எவனுக்கும் தெரியுமோ ?

ணங்கள் தேடும் மாமிசப்பட்சிகள்;
பிணங்கள் தின்னும் அதிசயப் பூச்சிகள்.

யிரின் உறைவிடம் ஒருவனும் அறியா ;
 உணர்ந்தவன் உலகினில் இருப்பது  தெரியா.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Thursday, September 1, 2011

Baa Baa Black Sheep By Airtel super singer SRINIVAS !

Copyright : Srinivas

ர்டெல் சூப்பர் சிங்கர் ஸ்ரீநிவாஸ் , தனது வசீகரக் குரலால் மனதை மயக்கும் மாயன். திருமணமானவர் எனினும் , அவரின் குரலுக்கும் அவருக்கும் பெண் ரசிகைகள் அதிகம். நானும் அவருடைய கந்தர்வக் குரலக்கு அடிமை தான். பல திரையிசைப் பாடல்களை அவர் பாடி நாம் கேட்டிருக்கிறோம் . ஆனால், Baa Baa Black Sheep ? இதோ உங்களுக்காக.





வீடியோ பாத்திட்டு கிளம்பிடாதீங்க ! அப்படியே அவருடைய வலைத்தளத்துக்கு போங்க ; அவர் குரலில் நிறைய பாடல்கள் கேளுங்க !  வருங்கால இசையுலகம் உங்களுக்காக காத்திருக்கிறது ஸ்ரீனி நண்பா ! வாழ்த்துக்கள் ! 

வலைத்தள முகவரிக்கு செல்ல இங்கே அழுத்தவும்


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Saturday, August 20, 2011

சத்தியசீலனின் தத்துவங்கள் !

Photo Courtesy : GOOGLE

டைப்பதற்கு முன்
விற்று விடுங்கள் - எங்கள்
சிறகுகளை !!
இப்படிக்கு கூண்டுக்கிளி 
ரசியல் என்னும் சதுரங்க விளையாட்டில் வெட்டுப்படுபவர்கள் வாக்காள சிப்பாய்கள் மட்டுமே !
ணமான பெண்களின் பேச்சுக்கு இரையாவது இறைவன் இல்லையென்றால் கணவன்
ல்லூரிக்காலங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களில் மட்டுமே மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது ! நம்பவில்லையென்றால் உங்கள் திருமணப் புகைப்படங்களைப் பாருங்கள்.
சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.
"ருவன் செய்தால் தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன் பெயர் நாகரீகம். "
வறுதலாக புரிந்து கொள்வது பெண்களுக்கே உரித்தான விஷயம் போல ...
து என்னவோ ! தெரியவில்லை ... தான் பார்க்கும் வேலையைத் தன் மகன் பார்க்கக்கூடாதென அப்பாக்கள் பிடிவாதமாகவே இருக்கிறார்கள்.
லங்கைத் தமிழனுக்கு உறுப்புடியாய் உதவுவதற்கு ஒருவனுக்கும் துப்பு இல்லை. ஆனால் ... ஆயிரமாயிரம் மேடைகள்; ஆக்ரோசமான பேச்சுகள்; புத்தகம் தோறும் கவிதைகள்; இன்னும் பல பல ... எல்லாம் வேசங்கள்! நம் வாழ்வு செழிக்க என் ஈழத்தமிழனின் கண்ணீரில் அல்லவா நாம் குளிர் காய்கிறோம்.
போரின் காயங்களும்; மனித உரிமை மீறல்களும்; பெண்மைத் திருட்டுகளும் .. எனக்கு ஒன்றை மட்டும் நினைவுப் படுத்திக்கொண்டே இருக்கிறது. " கடவுள் இருக்கிறாரா ? ".
னக்கு ஒரு காதலி வேண்டும். என்னுடைய இலட்சியங்களையும் அதற்காக கொடுக்கப்படும் வலிகளையும்... முடிந்தால் என்னையும் நேசிக்கின்ற காதலி வேண்டும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
காதலிப்பவர்கள் அழகாய் இல்லமால் இருக்கலாம். ஆனால் காதல் அழகானது. ஆதலில், காதல் செய்வீர் .
ல்லா உறவுகளையும் பணம் தின்றுவிடுகிறது ; நட்பினைத் தவிர ...
ன் கையெழுத்து ஆட்டோகிராப் ஆகும் பகலுக்காக ...
தூங்காமல் விடிகின்றன இரவுகளும்; கலையாமல் விரட்டுகின்றன கனவுகளும் .
ண்களின் அழுகைக்கு சொந்தக்காரிகள் பெண்கள் மட்டுமே !
ன்னுடைய கடைசி நிமிட ஆசை வரை பூர்த்தி செய்ய வேண்டுமேன்பதற்காகவே ... நான் உன்னைக் காதல் செய்கிறேன் 
ன்னை உலகம் அறியும் வரை ..
நீ எழுதும் கவிதைகளெல்லாம் கிறுக்கல்கள் ;
உன்னை உலகம் உணர்ந்த பின்பு ..
நீ கிறுக்கியவைகள் கூட கவிதைகள் .
செய்த உதவிகள் சுட்டிக்காடுப்படும் பொழுது தான், உதவியதின் உண்மையும்... உதவியவர்களின் தன்மையும் .... உறுத்திக் கொல்கிறது.
லகிலயே !!!
மிகச் சிறந்த கேள்வி - மௌனம்;
மிகச் சிறந்த பதில் - புன்னகை.
கொடுப்பவர்களாக இருங்கள் .... அன்பு உட்பட !!
ன்ன தான் தீவிரமாக முயற்சி செய்தாலும் ... சில விசயங்களில் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் பட மட்டுமே முடிகின்றது .
 
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
 

Thursday, August 18, 2011

தனிமையில் தோழனுடன் !!




முதலில் தோழி ஸ்ரீ பூர்ணாவிற்கு எனது நன்றிகள் ! ஒரு அழகான ஓவியம் அனுப்பி கவி எழத கூறியதற்கு ... இதோ தோழியின் மின்னஞ்சல் வரிகள் :

" Hi..........
          The blog is awesome and the poems r to the point and especially the poem between hand n  u to write a poem for Arun. Tat s totally coooool...... Great Job....... I request u to write few lines for tis favourite pic of mine.
Thank u."

ந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு உண்மை எனக்கு நினைவுக்கு வந்தது . ஆண்களுக்கு படைப்புத் தன்மை அதிகம் ; பெண்களுக்கு மட்டும் தான் ரசிப்புத் தன்மை அதிகம் . நன்றி தோழி ! இதோ உங்களுக்கான கவிதை .



ண்பி !
நட்பின் வழி காதல் மலரலாம் 
காதலின் வழி மணம் புரியலாம்
மணத்தின் வழி மழலை பேசலாம் 
மழலையும் ஒரு நாள் காதல் புரியலாம் !

த்தனையும் அறிந்தும்
ஆளில்லா அந்தியில்
தோளில் சாய்ந்து  
தொலைதூரம் தனிமையில்
வருகிறாயே ! பயமில்லையோ ?!

தொலைதூரம்...
தனிமை ....
திருமணம் ....
எதுவும் எனக்கு பயமில்லை !
காரணம்?


ட்பு  நம் மேல் கொண்ட நம்பிக்கையினால் !!!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Thursday, July 21, 2011

காதல் கொலை செய்யாதீர் !

Copyright -Wedding Photography | India@FB

தோழர் ராஜா அனுப்பிய  புகைப்படத்தில் காதலர்கள் மரத்தில் மரணம் செய்துக்  கொள்வது போல் இருந்தது. என்னுடைய கிறுக்கல்100 நண்பர்கள் இளகிய மனம் உடையவர்கள் என்பதாலும் , மேலும் காதலர்களின் அத்தகைய முடிவை நான் விரும்பாததாலும் அதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மன்னிக்கவும் ராஜா. தோழர் அனுப்பிய புகைப்படுத்துக்காக நான் கிறுக்கிய வரிகள்.


காதல் 
கொலை செய்யப்படுகின்றன 
மணக்கயிறுகளால் மற்றும்
பிணக்கயிறுகளால் ... 



- சத்தியசீலன் @கிறுக்கல்கள்100 


Friday, July 15, 2011

மும்பை தீவிரவாதம் - கசாப் தூக்கு - கண்ணீர்க் கவிதை

Photo Courtesy - medinab.blogspot.com


குறிப்பு : மும்பை குண்டுவெடிப்பில் உயிரிழந்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இக்கண்ணீர்க்கவிதை சமர்ப்பணம். அதோடு கசாபைத்  தூக்கிலிட்ட இத்தருணத்தில் இக்கவிதையை மறுபதிப்பு செய்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டுமானால் எனக்கு என்றுமே மரண தண்டனையில் உடன்பாடு இல்லை. அப்படி ஒருவனைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்றால் , இதுவரை தவறே செய்யாத ஒருவன் மூலம் அவனைத் தூக்கிலிடச் செய்யுங்கள்.


தீவிரவாதப் பேயடா ! - நீ
திருந்தும் வழியேதடா ?
தீர்க்கமாய் சொல்லி செல்லடா - இல்லை
திருகிக் குடிப்போம் உன் உயிரடா !

வெட்டி சாய்த்துவிட வேண்டுமடா - உன்
நெஞ்சில் ஈரம் பட்டு போய் விட்டதடா !
கண்ணீர்த்துளி கேட்கும் நரமாமிசா - உன்
கண்ணை வெட்டி நீயும் நீர் குடிடா !

யிரின் மகத்துவம் நீ பாரடா - உன்
உயிரைக் கொண்டு போராடடா !
வாதங்கள் செய்து வாழாதடா - உன்
தீவிர வாதங்கள் விழல் தானடா !

ழலைக் கொண்டாடும் தேசமடா - இது
உயிரைக் குடிக்கும் தேசமடா !
அரசியல் வணிகம் நடக்குதடா - தினமும்
அறிக்கை மட்டும் கேட்குதடா !

தவிகள் தந்தது மக்களடா
பாடையில் இருப்பதும் மக்களடா
உரிமைகள் தந்தது மக்களடா
உயிரைக் கொடுப்பதும் மக்களடா !

காந்தியம் பிறக்க மறந்ததடா - காந்தி
நோட்டுகள் பிணங்கள் கேட்குதடா !
சாந்திகள் இல்லா நாடடா - என்
சந்ததிக்கு ஏது வழியடா !

கிம்சை தந்த  நாடடா - அது
னுதினமும் அழுவது ஏனடா !
ஒருமுறை சிந்தித்து பாரடா - எங்கள்
உயிரைக் குடிப்பது ஏனடா !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 

Thursday, July 7, 2011

கருக்கலைப்பு காலத்தின் கட்டயாமா ?


Copyright -  Jeremy Snell @ flickr

ண்மையில் முகப்புத்தகத்தில் ஒரு வீடியோ பதிவு பார்த்தேன். நீங்களும் அதனைப் பார்த்தால் நான் கூற வருவது உங்களுக்கு எளிதாக விளங்கும் என விழைகிறேன். மேலும், தன் இன்பத்தை முன்னிறுத்தும் இந்த இளைய சமுதாயத்தில் கருக்கலைப்பு என்பது அத்தியாவசியமானதாக மாற்றப்பட்டது வருந்தத்தக்கது.




Medical termination of Pregnancy Act ( MTP) 1947 , ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. Jammu & Kashmir இல் மட்டும் இச்சட்டம் நவம்பர் 1 , 1976  முதல் அமல்படுத்தப்பட்டது. அச்ச்சட்டத்தின் படி 20  வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம். அச்சட்டம் கருக்கலைப்பு செய்வோர் ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அக்கருக்கலைப்பு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இவ்வகையில் நடைபெறாத கருக்கலைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானவை. லர் பயத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் கருக்கலைப்புக்குத்  தாங்களே  மருந்துகளை உட்கொள்வதும், பல வினோதமான முறைகளைக் கடைப்பிடிப்பதும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய செயல்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் முடியும் வாய்ப்புகளும் உள்ளது. 

நான் என் சில நெருங்கிய நண்பர்கள் மூலம் அறிந்த செய்தி. வேலூரில் உள்ள புகழ் பெற்ற தனியார்  கல்லூரியில் கருக்கலைப்புகள் சர்வசாதாரணாமாக நடைபெறுகிறது என்றும், அதற்கு என்றே " ABORTION WARD"  இருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். அது எந்த அளவு உண்மை என்பது நான் அறியாத ஒன்று.என்னுடைய கல்லூரியின் வட  இந்திய முதலாமாண்டு மாணவன் ஒருவனிடம் அவன் பெண் தோழியைப் பற்றி கிண்டலாக விசாரித்துக் கொண்டிருந்தோம். அதற்கு அவன் கூறியது அதிர்ச்சியுடன் அச்சம்மும் அடைய செய்தது. " Yes sir ! We had sex when I was in 12th and she was in her 10th. Whenever I had a feeling, I used to call her and We have sex in the hotel opposite to the lake at my Home town. " பட்டென்று அறைய வேண்டும் போல் இருந்தது. அறைந்தால் ராக்கிங் கொடுமை என்றாகி விடுமே !!? அதனோடு மட்டுமல்லாமல் சென்னை, மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களில் கல்லூரி மாணவ மாணவியர் வீட்டுக்குத் தெரியாமல் வெளியில் தங்குவதும், ஹார்மோன் பொங்கி இன்பம் காண்பதும், பின்பு கண்ணீர் சிந்துவதும் , இன்னும் சிலர் 'அது எல்லாம் ஒரு விசயமே இல்ல ! ' என வெகு சாதரணாமாக எடுத்துக் கொள்வதும் நடைமுறையில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது . என்னுடைய நெருங்கிய முகப்புத்தக நண்பர் கூறியது இன்னும் அதிர்ச்சியூட்டியது , " பாஸ், லவ் லவ்வுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தாளுக ; நான் தெளிவா சொல்லிட்டேன் , 'I DON'T BELIEVE IN RELATIONSHIP, IF U WANT WE CAN SHARE BED' னு , அதுக்கப்புறம் 10 டு 15 டைம்ஸ் பாஸ் ! ". எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை , அதன் பிறகு அந்த நட்பு முகப்புத்தகத்தில் Unfriend பட்டனை கிளிக் செய்வதில் முடிந்தது.

ருக்கலைப்புக்கு காரணம் ஏழ்மை, இளமை, அறியாமை, கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமை என பல இருந்தாலும் , அண்மைக்காலமாக PREMARITAL SEX முக்கிய காரணம் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதனைக் காட்டிலும் வருத்தம் என்னவென்றால், இதில் தவறில்லை என ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தெரிவித்திருப்பதுதான். டை முதல் நடை வரை 'நாகரீகம்' என மார்தட்டிக் கொள்ளும் இந்த நவீன இளைய சமுதாயம் இதனையும் நாகரீகம் என சேர்த்துக்கொள்ளுமோ?! "ஒருவன் செய்தால்  தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன்  பெயர் நாகரீகம். " இதற்கு "தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா என்று சப்பைக் கட்டு வேறு !!".


சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.

தையெல்லாம் பார்க்கும் பொழுது என் மனதில் எழுவது ஒன்றே ஒன்று தான்...

" புதுமை என்ற பெயரில் நாம் அள்ளிப் பூசிக்கொள்வது சந்தனமல்ல ; சாக்கடையே  ! "




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, July 3, 2011

எனது தத்துவங்கள்




பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தோடு நடக்கும் காதல் திருமணங்களில் காதலர்களின் வைராக்கியத்தைக் காட்டிலும் பெற்றோர்களின் பெருந்தன்மையையே என்னால் உணர முடிகிறது !!!
பெரிய வீட்டு பிள்ளைகளின் பத்திரிக்கை செலவிலே என் பல ஏழை நண்பர்களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுவிடுகின்றன !
" ஏழ்மை " என்ற ஒரு அடையாளம் போதும் என்னைக் குற்றவாளி என்று சமுதாயம் ஒப்புக் கொள்ள !
 
ஆடவர்கள் அறியாமால் உரசினால் கூட அதட்டிக் கேட்கும் ஆண்கள் சமூகம், பெண்கள் உரசினால் மட்டும் பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறது !
தாய்மொழியில் பேசும், புனையும் ஆர்வத்துக்காக என்னை அவமானப்படுத்த முயல்கிறது இந்தச் சமூகம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
உறவுகளும் உணர்வுகளும் மென்மையானவை . உடைத்து விடாதீர்கள் !
 
தவம் செய்யாமல் கிடைத்த வரம் காதல்
தவறு செய்யாமல் கிடைத்த சாபமும் காதல்.
 
என்னை நானே உயர்த்திக் கொள்ள முயல்கிறேன் . அப்பொழுது தானே ! என்னை நாடும் நண்பர்களுக்கு என்னால் உதவ முடியும். பணத்தால் மட்டுமல்ல .... மனத்தால் கூடவும் .
வறுமை வரைந்த வார்த்தைகளுக்கு மட்டும் தான் ....
வலியும் அதிகம்; வலிமையையும் அதிகம் .
 
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்தாதீர்கள். "
"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம்
அறிவுக்கு மட்டும்தான் "
  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Related Posts Plugin for WordPress, Blogger...