Copyright : fotocommunity.com |
பேருந்து நெரிசலில்
பக்கத்து இருக்கையில்
பளிச்சென்று தேவதை
பக்கத்தில் அவள் அன்னையோடு !
தனியே சிரிக்கிறாள்
கேசம் கலைக்கிறாள்
கைநீட்டி அழைக்கிறாள்
மழலை மொழிகிறாள்
முத்தம் தருகிறாள்
கைபிடித்து இழுக்கிறாள்.
பக்கம் பார்க்கிறாள்
கன்னத்தில் அறைகிறாள்
காதல் சொல்கிறாள்
கண்களில் கொல்கிறாள்
கடைசியில் கேட்கிறாள் ...
" நான் UKG .... நீ ? "
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
பேருந்து தேவதை ...பெயர் கூறும் கவிதை ..
ReplyDeleteரொம்ப ரசித்தேன் .. வாழ்த்துக்கள்
@அரசன் நன்றி ! நண்பா !
ReplyDeleteநல்ல கவிதை.....
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com