Saturday, March 17, 2012

அடுப்பங்கறை

Photo Courtesy : Gangadhara108@Flikr

சுடச் சுட இட்லி பரிமாறி - வர வர
சரியாவே சாப்பிடுறதே இல்ல - என
செல்லமாய் அதட்டி ...
சட்னி, சாம்பார் , மீன் குழம்புக்கு மத்தியில்
சடாரென்று தள்ளிவிட்டு ..
சத்தமில்லாமல் அடுப்பங்கறையில் நீ
சாப்பிடுவாயே ! - 'பழையது' *
அதில் உள்ளதம்மா
பலகோடி வருடங்களுக்கான பாசமும் ;
'நீ இன்னும் சாப்பிடலையா?' எனக் கேட்க மறந்த என்னுடைய பாவமும்.

*பழையது - முதல் நாள் செய்து மிஞ்சிய சாதம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, March 14, 2012

உயிர்ப்பார்வை


Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????

 my heart expecting this pic on ur blog wit your lines

thank you

with regards,
sarath 
 
 பிப்ரவரி 23 , Jackee Sarath இடம் இருந்து வந்த மின்னசல் வரிகள் இவை ! உங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா !


 
தீப்பற்றி எரியும் -  என்
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?

காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?

னி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?

ளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?

பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?

தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?

யிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?

ரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?

விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?

வையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 8, 2012

கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ?

Copyright : Flickr

ன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது அந்தத் தேடுதல் வேட்டை . என் நண்பனின் தம்பிக்கு ( என் தம்பி எனவும் கொள்ளலாம்.) ஒரு மேல் சட்டை வாங்குவது அதன் நோக்கம். அதன் தளபதிகள் என் தாய் தந்தையர்; நான் போர் வீரன். அனைத்து அங்காடிகளையும் அலசி ஆராய்ந்த பின்பு மிஞ்சியது ... ஏமாற்றமே ! ஏனெனில்... தளபதிகளுக்கு இந்த வீரன் இட்டக் கட்டளை, " White or Black T-Shirt L size with reasonable prize and it should impress me " . அனைத்துக் கோட்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டாலும், " IMPRESS ME " என்னும் கோட்பாடு பூர்த்தி செய்யப்படாததால் மிஞ்சியது ஏமாற்றமே !

ம் ! நண்பர்களே , தாங்கள் கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ? ஞாபகம் இருக்கிறதா ?   எனக்குத் தெரியாது இந்தப் பரிசு கொடுக்கும் பழக்கத்தை எவன் ஏற்படுத்தியது என்று !  ( வேண்டுமென்றால் ஹாய் மதனிடம் கேட்கலாம் )  . அவன் எவனாக இருந்தாலும் , அவன் ஞானி. அகமகிழ்ச்சிக்கு வித்திடுபவர்கள் ஞானிகள். பரிசுகளும் அப்படியே , அகமகிழ்ச்சிக்கு வித்திடும் அருமருந்து.

ங்கு பெரும்பாலும், பரிசுகள் பணங்களால் வாங்கப்படுகின்றன. அவரவர் கையிருப்பை பொருத்தும், பின் வரும் லாபங்கள் நினைத்தும், பொருட்களின் இருப்பைப் பொருத்தும். இப்படியா பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ? எங்கு பரிசுகள் மனங்களால் வாங்கப்படுகின்றனவோ , அங்கு தான் பரிசுகளுக்குப் பரிசளிக்கப்படுகின்றது.

ரிசு என்பது வெறும் பொருள் அல்ல . அது கொடுப்பவனுடைய சுவாசம், பெருபவனுடைய உயிர். சுவாசம் எவ்வளவு தூய்மையானதோ ! விலைமதிப்பிலாததோ ! அது போல் நாம் தரும் பரிசுகள் இருக்க வேண்டும். அதைப் பெறுபவர் அந்த சுவாசத்தால் தான் பெற்ற உயிர் போல் அதை பாவிக்க வேண்டும் . இது நேர்ந்தால் அங்கு ஒரு உலகம் பிறக்கும். நட்பு உலகம்! பணமில்லாத, பேதமில்லாத, அன்பால் நிறைந்த நட்புலகம்.

ரிசுகள் இருவகைப்படும் . ஆடம்பரத்திற்காக .... உபயோகப்படுவதற்காக ... இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துத் தருவது புத்திசாலித்தனம். அதை உம்மால் தேர்வு செய்ய  இயலவில்லை என்றால், தாங்கள் அந்த நபருக்குப் பரிசளிக்கத் தேவையில்லை. ஏனெலில் ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் தரும் பரிசுகளும் வீணே ! அந்த உறவு நீடித்து நிலைக்கும் என்ற கற்பனையும் வீணே! பரிசுகள் எப்பொழுதும் குசேலனின் அவில் போல இருக்க வேண்டும். பிடித்தமானதாக; பயனுள்ளதாக.

நாம் வாங்கிய பொருட்களின் விலை தெரியக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி அதன் விலை அட்டையை அகற்றி விட சொல்கிறோம்.இது எதை மறைப்பதற்காக ?  சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய போலியான கவுரவத்திற்காக. உங்களைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர் என்றால், அந்தப் பரிசின் விலையை அவர் கண்டுகொள்ளப் போவதில்லை. " இது என்னால் முடிந்தது. இதில் பணத்தின் மதிப்பு குறைவானதாக இருக்கலாம்; ஆனால், அன்பு அளவுக்கதிகமாக இருக்கிறது  " என்று ,  எங்கு  உங்களால் பரிசளிக்க முடிகிறதோ , அங்கு தான் பரிசின் வீரமும், உங்கள் நட்பின் தீரமும் ஒளிந்திருக்கிறது.

பரிசளிக்கும் முன் சிந்திக்க வேண்டியவை :
  • முதலில் உங்கள் நண்பருக்கு எது தேவையென்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப பரிசளியுங்கள்.
  • உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மறக்காமல் அதைத் தேர்ந்தெடுங்கள். விலையின் அளவுகோல் கொண்டு ரசனையை அளக்காதீர்கள். 
  • விலைஅட்டையை நீக்காமல் பரிசளித்துப் பழகுங்கள்.
  • வழக்கமாக ... பிறந்தநாள், திருமண நாள் என பரிசளித்துப் பழகாதீர்கள். ஏனெலில் அது எதிர்பார்ப்பை வளர்த்து விடும். ஒரு சூழலில் உங்களால் பரிசளிக்க இயலவில்லை என்றால் தன் மீதுள்ள அன்பு குறைந்து விட்டதோ என உங்கள் நண்பர் நினைக்கத் தோன்றும். எனவே, ஆச்சரியமாக ! சம்பந்தமில்லாத நாட்களில் பரிசளியுங்கள். அது அந்த நாளையும் உங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
  • பரிசுகளோடு, அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் சிறுகுறிப்பில் எழுதி பரிசளியுங்கள். அது அன்பை மேலும் வலுப்படுத்தும்.
  • பொதுவாக கைக்குட்டை, பேனா போன்றவை பரிசளிக்கக்கூடாது என்னும் நம்பிக்கைகள் இருக்கின்றன. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள் .. தவறில்லை. அன்பானவர்களுக்கு மத்தியில் உலவும் சிறுமுட்டாள்த்தனம் அழகானவை.
  • கொடுத்த பரிசுகளை எந்தவொரு சூழலிலும் சொல்லிக்காண்பிக்காதீர்கள். அது, உங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்வது போல் அமையும்.
  • பரிசுகள் பற்றிய எதிர்பார்புகளை உருவாக்காதீர்கள். நீங்களும் எதிர்பார்க்காதீர்கள். ஆச்சரிய பரிசுகள் மட்டுமே அழகானவை! உயிரானவை !

பரிசுகள் அழகானவை. பரிசளிப்பவர்கள் அழகானவர்கள். பரிசு பெறுபவர்கள் பாக்கியவான்கள். வாருங்கள், இன்று முதல் பரிசளித்துப் பழகுவோம்.
  
சரி ! உங்களில் யார் எனக்கு முதல் பரிசு அளிக்கப்போகிறீர்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 1, 2012

தயவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !




முன் குறிப்பு : தன்னுடைய புகைப்படத்தை முகப்புத்தகம் மூலம் பகிர்ந்து கொண்ட நண்பர் சுதாகருக்கு எனது நன்றிகள் ! 

யவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !
யாருக்குத் தெரியும் - அடுத்தமுறை
உங்கள் மகனோ! மகளோ! வரும்பொழுது
காணாமல் போயிருக்கக்கூடும்
காயம் பட்ட கற்சிற்பங்கள் ;
காற்றின் காரணமாக - கொஞ்சம்
கவனக்குறைவின் காரணமாக !

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...