Showing posts with label Eye poems. Show all posts
Showing posts with label Eye poems. Show all posts

Wednesday, March 14, 2012

உயிர்ப்பார்வை


Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????

 my heart expecting this pic on ur blog wit your lines

thank you

with regards,
sarath 
 
 பிப்ரவரி 23 , Jackee Sarath இடம் இருந்து வந்த மின்னசல் வரிகள் இவை ! உங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா !


 
தீப்பற்றி எரியும் -  என்
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?

காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?

னி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?

ளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?

பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?

தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?

யிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?

ரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?

விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?

வையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...