Showing posts with label புகைப்படக் கவிதைகள். Show all posts
Showing posts with label புகைப்படக் கவிதைகள். Show all posts

Tuesday, September 2, 2014

மோதிரம்





சில பல காலங்களுக்கு முன்பு, புகைப்படங்களுக்குக் கவிதை எழுதி வந்தேன். அதை, ஞாபகம் வைத்து தோழி சரண்யா, இந்த புகைப்படத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதோ அது உங்கள் முன்னே !


னைக் காணா வேளையில் 
நான் கடிக்கும் ஆறாம் விரல் 
மோதிரம்.

மோதிரத்தின் வெற்றிடமாய் 
என்னுள்ளம் தானிருக்க ...
தினம் தினம் நிரப்புகிறாய் 
விரலால் ... விழியால் .. 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Wednesday, March 14, 2012

உயிர்ப்பார்வை


Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????

 my heart expecting this pic on ur blog wit your lines

thank you

with regards,
sarath 
 
 பிப்ரவரி 23 , Jackee Sarath இடம் இருந்து வந்த மின்னசல் வரிகள் இவை ! உங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா !


 
தீப்பற்றி எரியும் -  என்
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?

காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?

னி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?

ளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?

பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?

தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?

யிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?

ரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?

விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?

வையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 1, 2012

தயவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !




முன் குறிப்பு : தன்னுடைய புகைப்படத்தை முகப்புத்தகம் மூலம் பகிர்ந்து கொண்ட நண்பர் சுதாகருக்கு எனது நன்றிகள் ! 

யவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !
யாருக்குத் தெரியும் - அடுத்தமுறை
உங்கள் மகனோ! மகளோ! வரும்பொழுது
காணாமல் போயிருக்கக்கூடும்
காயம் பட்ட கற்சிற்பங்கள் ;
காற்றின் காரணமாக - கொஞ்சம்
கவனக்குறைவின் காரணமாக !

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, August 18, 2011

தனிமையில் தோழனுடன் !!




முதலில் தோழி ஸ்ரீ பூர்ணாவிற்கு எனது நன்றிகள் ! ஒரு அழகான ஓவியம் அனுப்பி கவி எழத கூறியதற்கு ... இதோ தோழியின் மின்னஞ்சல் வரிகள் :

" Hi..........
          The blog is awesome and the poems r to the point and especially the poem between hand n  u to write a poem for Arun. Tat s totally coooool...... Great Job....... I request u to write few lines for tis favourite pic of mine.
Thank u."

ந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு உண்மை எனக்கு நினைவுக்கு வந்தது . ஆண்களுக்கு படைப்புத் தன்மை அதிகம் ; பெண்களுக்கு மட்டும் தான் ரசிப்புத் தன்மை அதிகம் . நன்றி தோழி ! இதோ உங்களுக்கான கவிதை .



ண்பி !
நட்பின் வழி காதல் மலரலாம் 
காதலின் வழி மணம் புரியலாம்
மணத்தின் வழி மழலை பேசலாம் 
மழலையும் ஒரு நாள் காதல் புரியலாம் !

த்தனையும் அறிந்தும்
ஆளில்லா அந்தியில்
தோளில் சாய்ந்து  
தொலைதூரம் தனிமையில்
வருகிறாயே ! பயமில்லையோ ?!

தொலைதூரம்...
தனிமை ....
திருமணம் ....
எதுவும் எனக்கு பயமில்லை !
காரணம்?


ட்பு  நம் மேல் கொண்ட நம்பிக்கையினால் !!!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Thursday, July 21, 2011

காதல் கொலை செய்யாதீர் !

Copyright -Wedding Photography | India@FB

தோழர் ராஜா அனுப்பிய  புகைப்படத்தில் காதலர்கள் மரத்தில் மரணம் செய்துக்  கொள்வது போல் இருந்தது. என்னுடைய கிறுக்கல்100 நண்பர்கள் இளகிய மனம் உடையவர்கள் என்பதாலும் , மேலும் காதலர்களின் அத்தகைய முடிவை நான் விரும்பாததாலும் அதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மன்னிக்கவும் ராஜா. தோழர் அனுப்பிய புகைப்படுத்துக்காக நான் கிறுக்கிய வரிகள்.


காதல் 
கொலை செய்யப்படுகின்றன 
மணக்கயிறுகளால் மற்றும்
பிணக்கயிறுகளால் ... 



- சத்தியசீலன் @கிறுக்கல்கள்100 


Sunday, June 26, 2011

ஜனனம்

Photo Courtesy : Arun

குறிப்பு எனது நன்றிகள் தோழர் அருண் அவர்களுக்கு .... அவர் அனுப்பிய புகைப்படத்திற்கு நான் எழுதிய வரிகள் .


றக்கப் போகும்
இரு ஜீவன்
இரக்கமில்லாமல்
இறப்பதற்காக
இன்னொரு ஜீவனை
ஈன்றெடுக்கும்
இன்பவிழா
ஜனனம் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...