Showing posts with label சினிமா சிரிமா. Show all posts
Showing posts with label சினிமா சிரிமா. Show all posts

Monday, July 28, 2014

இதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்



முன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.



இசை : உமாசங்கர் 
வரிகள் : மரு.சத்தியசீலன்
இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்



படத்தின் சுட்டி : https://www.youtube.com/watch?v=UstJCj5r2dw

 தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
சிநேகம் உன்னோடு
யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே
எந்தன் கண்ணோடு

மொழியிழந்தேன் திரிந்தேன்
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
( ஹம்மிங் )

ரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே .... 
( ஹம்மிங் ) 

ன் தேடல் பிழை நீ 
மழை தேடும் முகில் நீ - நான் 
கிறுக்காத கவிதைகள் நீ 

ன் தோளில் விழும் நீ 
மடியில் எழும் நான் - உன் 
ஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல். 

ங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும் 
காதலில் உனை நனைப்பேன் 
நரைகள்  விழுந்தாலும்  பிறைகள் தேய்ந்தாலும் - உன் 
காலடி நான் கிடப்பேன்.
( ஹம்மிங் ) 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும் - விமர்சனம்


னாதை ஆசிரமத்தில் வளர்ந்து, பெரியவனாகி, முகத்தில் புன்னகையும், பேச்சில் மயக்கும் வித்தையையும் கொண்ட 'பிக்ஸ் இட்' நிறுவனத்தின் சேல்ஸ் ரெப்  அரவிந்த் ( அறிமுகம் துல்கர் - நடிகர் மம்முட்டியின் மகன்)  உடைந்ததை எல்லாம் ஒட்ட வைக்கின்றார் உறவுகள் உட்பட. இவரே கதையின் நாயகன். பார்க்கும் பட்சத்தில் ஒட்டிக் கொள்ளும் முகபாவம், நடிப்பு, மென்மை துல்கருக்கு. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்வரவு.

முகத்தில் மெல்லிய சோகம் இலையாட, காதலனின் விருப்பங்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளும், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே முடங்கிக்கொள்ளும், அப்பாவின் இரண்டாம் திருமணத்தை அங்கீகரித்தும், அதனை தன் மனம் ஏற்க முடியாமல், இறந்த தன் தாயில் நினைவுகளோடு வாழ  ஏங்கும் பனிமலை அரசு மருத்துவமனையின் இளம் மருத்துவர் அஞ்சனா, கதையின் நாயகி. ( நஸ்ரியா )

ஸ்ரியாவின் சித்தியாக, எழுத்தாளராக மதுபாலா, சுகாதரத் துறை அமைச்சராக பாண்டியராஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் சங்கத் தலைவராக ரோபோ சங்கர், துல்கரின் நண்பன் அர்ஜுனன், அமைச்சரின் பி.ஏ வாக காளி, ஆசிரம இடத்தின் உரிமையாளராக வினுச்சக்கரவர்த்தி, நியூக்கிளியர் ஸ்டாராக ஜான் விஜய்,   ரேடியோ ஜாக்கி பாலாஜி, அப்புறம் முக்கியமாக, ப்ரைம் டிவியின் செய்தி வாசிப்பாளராக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இன்னும் பலர் இணைத்து கலந்து கட்டிய காமெடி மற்றும் கொஞ்சம் கருத்து நிறைந்த படமே வாயை மூடி பேசவும்.

னிமைலையை  "டம்ப் ஃப்ளு" என்ற வியாதி தாக்குகிறது. அது என்ன, எப்படி பரவுகிறது, எப்படி அதைத் தடுப்பது என ஒரு டாக்டர் கணக்காக அவர்களே சொல்லிவிடுகின்றனர். அதலால், நாம் யாரும் பயப்படத் தேவையில்லை. அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை யாரும் யாருடனும் பேச கூடாது எனும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏனெலில் அது பேசுவது மூலம் தான் பரவுமாம். இத்தகைய சூழலில், ஆர்.ஜே வாகத் துடிக்கும் துல்கர், தன் காதலை பிடிக்க வில்லை என சொல்லத் துடிக்கும் நஸ்ரியா மற்றும் பலரின் சூழ்நிலை என்னாகிறது என்பதே படத்தின் சுருக்கக் கதை.

காமெடி கலாட்டாவிற்கு ரோபோ உத்திரவாதம். 'விஸ்வரூப' விவகாரத்தை எடுத்துக் கலந்து கட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் முன் பாதி சுமார் ரகம். படத்தின் பின்பாதியில் யாரும் பேசாவிடினும், அயர்வு ஏற்படுத்தாமல் கடக்கின்றது. பின்னணி இசை நன்று. பாடல்களில், 'காதல் அரையைத்' தவிர மற்ற எதுவும் மனதில் சிவக்கவில்லை. கற்பனைக் கதையில் காமடி ரசம் பிழிந்து, கொஞ்சம் கருத்துச் செர்ரி வைத்திருக்கிறார்கள். நல்ல முயற்சி இருப்பினும், அனைத்து மக்களுக்கும் இது பிடிக்குமா என்பது சந்தேகம். படம் 'கொஞ்சம் நீளம்' துல்கர் கொடுக்கும் ஜவ்வு மிட்டாய் போல. மத்தபடி குமுதா ஹாப்பி அண்ணாச்சி !!!

பிடித்தது:

  1. கற்பனை  
  2. நகைச்சுவை 
  3. கருத்து ( பேசுனா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும் )
  4. ஒளிப்பதிவு 
  5. எடிட்டிங் 
பிடிக்காதது:
  1. திரைக்கதை நீளம் 
  2. பாடல்கள் 
டம் முடிந்த பின்பு, தாங்கள் தங்கள் வாழ்வில் கொஞ்சம் யோசித்து உங்கள் மனதில் பட்டதை சமரசம் செய்து கொள்ளாமல் தைரியமாக செய்தால் அதுவே படத்தின் வெற்றி. மொத்தத்தில் வாயை மூடி பேசவும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும் வைப்புகள் அதிகம் உள்ள படம்.

எனது மதிப்பீடு - 3.5/5 

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Wednesday, November 14, 2012

என் கனவுகளின் தொகுப்பு !


கிறுக்கல்கள்100 நண்பர்களுக்கு முதற்கண் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீண்ட போராட்டங்களுக்குப்  பிறகு, அண்மையில் தான் ஒரு குறும்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை முன்னமே முகப்புத்தகத்தில் நான் பகிர்ந்திருந்தாலும், நேற்று தீபாவளி நன்னாளில் உங்களுக்குச் சொல்லலாம் என விழைந்தேன். பிறகு தான், என் ஞான ஒளியில் ஒரு கீற்று என்னை உசுப்பேற்றி கீழ்வரும் வார்த்தைகளைக் கூறியது ! "அடேய் அற்ப சத்தியசீலா ! ஒருவேளை உனது நண்பர்கள் இனிப்புகளிலோ, வெடிச்சத்தங்களிலோ, வேடிக்கை வெளிச்சத்திலோ, துப்பாக்கியிலோ ( நேற்று படம் பார்த்த எனது நண்பர்கள் நன்றாக உள்ளது என சொல்லிய காரணத்தால், கூடிய விரைவில் நானும் துப்பாக்கியால் சுடப்படக் கூடும்), இல்லை துறு துறுவென ஆங்கிலம் பேசும் தமிழ் நடிகையின் பேட்டியிலோ மெய்மறந்திருக்கக்கூடும்; அப்பொழுது உன்னுடைய கிறுக்கல்கள்100, கிழிக்கப்படும் அல்லவா ! " யோசித்தேன்; ஆதலால் தான் இன்று இவ்வெளியீடு !

நிவேதிதா அவர்களின் தயாரிப்பில், கௌதமின் இயக்கத்தில், மற்றும் பலர் கடின உழைப்பாலும், கற்பனைத்திறத்தாலும் உருவாகிக்கொண்டிருக்கும் உன்னத படைப்பு தான் " என் கனவுகளின் தொகுப்பு ". அடியேன் ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியதும் இதற்கே ! ( கீழே, இடமிருந்து வலம் , ஐந்தாவது  இடத்தில் அடியேன் பெயர் இருப்பதை நோட் செய்யவும்.) என்னதான் நாம் பணியாற்றும் படம் என்றாலும், விமர்சனம் என்று வரும்பொழுது சற்று கராராகத் தானே இருக்க வேண்டும் ! இனி வருவது "போஸ்டர் விமர்சனம்".
இதுவரை இரண்டு போஸ்டர்களை அக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றினை மட்டும் நாம் பார்ப்போம்.

ரு இளைஞன் தனது அறையில், LED வெளிச்சத்தில், இடது கையால் தாளில் எழுதிக்கொண்டிருப்பது போல அக்காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகே, தலையணை போன்று இரண்டு புத்தகங்கள். சரி இப்பொழுது நம் கற்பனையையும் பிறகு விமர்சனத்தையும் தொடரலாம்.

த்தகைய சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது, ஒரு கல்லூரி மாணவன் தன்  காதலிக்கு கடிதம் எழுதுவது போலவே தோன்றுகிறது. இருப்பினும் ஹீரோவின் முகம் சற்று சீரியசாக இருப்பதால், வேறு எதாவது முக்கியமான காரணமாகவும் இருக்கலாம். ஏன் ! ஒரு சமூகப்போராளி மின்வே(வெ)ட்டைக்
குறித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகக் கூட இருக்கலாம்; இல்லை, ஏதோவொரு தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவனாகக் கூட இருக்கலாம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று சூழலுக்குமே இந்தத் தலைப்புப் பொருந்திப்போவது தான். விமர்சனத்திற்கு செல்வோமா ?

ழுத்துக்கோர்வையும், அதனை அதற்கேற்ற இடத்தில் பொருத்தியிருப்பதும் அழகு. "WAKE UP MEDIA PRESENTS" எதார்த்தமான சேர்க்கை என்றாலும், தலைப்போடு பொருந்திப்போவது அழகு. இருப்பினும், WAKE UP MEDIAவிற்கு LOGO இல்லாதது திருஷ்டி. மின்னொளியிலும், சூழலுக்கேற்ற உடைத்தேர்விலும், முகபாவனைகளிலும் கதையின் பாத்திரப்படைப்பிற்குப் பொருந்திப்போகும் கதை நாயகன் 'அஜய் ரூபன்' நல்லதொரு தேர்வு. குறுப்படத்துறையிலும், திரைத்துறையிலும் அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக உள்மனம் கூறுகிறது. மேலும் தமிழ்க்குறும்படம், போஸ்டர் முழுவதுமே ஆங்கிலம் பூசியிருப்பது ஒரு நெருடல். டைரக்டர் கவனிக்க !


து எப்படியோ ! இது வெறும் கற்பனைக்கனவுகளின் தொகுப்பா ?  இல்லை சாதனைக்கனவுகளின் தொகுப்பா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

கொசுறு தகவல் : "என்னடா இவன் ! பத்து பதினஞ்சு பாட்டு எழுதுனவன் எல்லாம் சும்மா இருக்கான் ; ஒரு பாட்டு எழுதிட்டு இவன் கொடுக்குற அலும்பு இருக்கே ! " என இதழின் ஓரத்தில் என்னை வைது கொண்டிருப்பவர்களுக்கு, என்னுடைய அம்மாசிக்கு ( அம்மம்மா) இப்பாடலை ஒலித்துக் காண்பித்தேன். ' நான் படாத தாலாட்டா?' என சொல்லிக்கொண்டே கேட்க ஆரம்பித்தவர்கள், " நல்ல தாண்டா இருக்கு; உன் பொண்டாட்டிக்கு வேலை மிச்சம்" என சொல்லிச் சென்றாகள் ! அன்பார்ந்த அருமை நண்பர்களே ! இது ஒன்னு போதாதா ஐயா அலும்பு கொடுக்க ?


உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழுள்ள பிளாக்கர் கருத்துப்பெட்டி அல்லது முகப்புதுகக் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Monday, November 21, 2011

அன்புள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு ...

Photo Courtesy: http://www.nilacharal.com

குறிப்பு: ஏழாம் அறிவு திரையிடப்பட்ட போது எழுதியது! இப்பொழுது தலைவர் துப்பாக்கியில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டார்.


ன்புள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு ,


அடியேன் தமிழன் எழுதிக் கொள்வது . " ஏழாம் அறிவு " பார்த்தேன்; தமிழன் பெருமை சொல்வதற்காக எடுத்த படம் வேற்று மொழிகளில் தடம் மாறியிருந்தது. உங்கள் ரசிகன், தமிழன், கலைஞன் என்ற முறையில் உங்கள் முன் சில கேள்விகளை நான் கேட்க விழைகிறேன். எங்கேனும் இக்கேள்விகளை நீங்கள் கடக்க நேர்ந்தால் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.

  • தமிழ்ப்பெண் ஸ்ருதி நாவில் "தமிழ்" வரவில்லை. 'தமில்' என்று சொல்லும் ஒருவரை தமிழின் பெருமைப்பற்றிப் பேச வைத்தது அழகா ? கமலின் மகள் என்பதற்காக தமிழைக் கொலை செய்வதற்குத் தாங்கள் அனுமதிக்கலாமா ? தங்கக் கத்தியால் குத்தினால், தமிழுக்கும், தமிழனுக்கும் வலிக்காதா என்ன ?
  •  ஒரு மனிதனக்கு அப்பாவிடமிருந்து பாதி DNAக்களும் அம்மாவிடமிருந்து மீதி DNAக்களும் வரும் பொழுது, பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதிதர்மன் DNAவோடு , அரவிந்தின் DNA 80 % மேல் பொருந்தியிருப்பது எவ்வாறு அறிவியலில் சாத்தியமாகும் ? 
  • தமிழ் மொழியில் வெளியான படத்தில், அறிஞர்கள் அவையில் தமிழில் பேச விரும்பும் ஸ்ருதி , தெலுங்கு மொழியில் வெளியான படத்தில் தெலுங்கில் பேச விரும்புவதன் உள்நோக்கம் என்ன ? இதில் நீங்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள் ... தமிழர்களையா ? இல்லை இந்தியர்களையா ?
  • இதே படம் இலங்கையிலும் வெளியானது . உண்மைத் தமிழனாகத் தாங்கள் இருந்திருந்தால், தாங்கள் ஏழாம் அறிவை இலங்கையில் திரையிட அனுமதித்திருக்கக் கூடாது. மேலும், " ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரம் இல்லை துரோகம். " போன்ற வசனங்களை இலங்கை அரசு நீக்கிய பொழுதாவது , தாங்கள் சிந்தித்திருக்க வேண்டாமா ?
  • ஒரு சீனத்து இளைஞன் தமிழகத்தில் அவன் இஷ்டத்துக்கு அடிதடி விளையாட்டுகளை அரங்கேற்றும் பொழுது தமிழக போலீஸ் என்ன பாப்கார்ன் தின்று கொண்டா இருக்கும் ? கொஞ்சம் யோசிங்க நண்பா !

" ஏழாம் அறிவு " முருகதாசின் ஆறாம் அறிவை பணம் வந்து தின்று ஐந்தறிவாக மாற்றி விட்டதே என்ற எண்ணம் எனக்கு மட்டும் தோன்றவில்லை; தமிழை நேசிக்கும் பல தமிழர்களுக்கும் தான் ...


அன்புடன்,
உங்கள் ரசிகன் ( தமிழன் ).

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, November 20, 2011

கை நழுவிய நளனும் நந்தினியும் !



குறிப்பு: சில பல மாதங்களுக்கு 'நளனும் நந்தினியும்' இயக்குனர் வெங்கடேசன் அவர்களை அழைத்தேன். பாடல் குறித்து விவாதித்தோம். இசை கொடுக்கப்பட்டது. பாடல் எழுதப்பட்டது. ஆனால், காரணங்கள் சிலவால்  வாய்ப்பு கை நழுவியது. அந்த வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு இந்த வரிகள் பிடித்திருக்கிறதா ?


ன்னவோ சொல்லுற உந்தன் கண்ணால
என்னத்தான் கொல்லுற உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )

ழையடிக்குது குளிரடிக்குது
மனசுக்குள்ள புயலடிக்குது .
படபடக்குது துடிதுடிக்குது
இதயம் ரெண்டும் சலசலக்குதுவே ! ( கோரஸ் )

பூ மிதிச்சு வண்டு சாகுதே !
தேன் குடிக்க மனசு ஏங்குதே !
விழியிலது மொழிகளது
நூறுகோடி உள்ளதே !
மௌனமது போதுமது
காதல் பேய் கொல்லுதே ! ( ஆண் )

பூ மிதிச்சு வண்டு அது சாகும் கதையிலே !
தேன் முடிஞ்சா பூ கசக்கும் காதல் உலகிலே !
விழியில் என்ன மொழிகள் உண்டு ? பொய் சொல்லுற !
பல பொய்கள் சொல்லும் காதலுக்கு பேய் தேவல !  ( பெண் )


ன்னவோ செய்யுற  உந்தன் கண்ணால
என்னத்தான் நெய்யுற  உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Friday, June 17, 2011

இவ்வளவு அழகானதா இலங்கை ?

Copyright : tamilwin.com

குறிப்பு : நல்லதொரு முடிவை உலகம் எடுக்கட்டும் ; அதுவரை என் குருதி கொஞ்சம் கொதிக்கட்டும். போராடும் மாணவர்களுக்கு கிறுக்கல்கள்100 சார்பாக வணக்கங்கள்.

வ்வளவு அழகானதா இலங்கை !

ற்றை மரம்.
அதனைக் கடந்து செல்லும் ஒரேயொரு பறவை.
பசுமை பொங்கும் புல்வெளி
பனித்துளி படர்ந்த சிலந்தி வீடு
செவ்வானத்தையும் செம்மண்ணையும் இணைக்கும் புளுதிப்போர்வை

என முதல் சில நிமிடங்கள் அனைத்தும் கேமரா கவிதைகள். வாழ்த்துக்கள்

ழகை ரசிக்கும் பொழுதே, அழுகை தொட்டுவிடுகிறது நிதர்சனக் காட்சிகளால்.

ற்றாமையை விழிகளில் தாங்கும் தமக்கையும் தமையனும்
விழி இழந்த பெரியவர்
மென்சோகம் கொள்ளும் நிறைமாத தமிழச்சி
போரின் வடுக்கள்
கனவுகளைத் தேடும்  சிறார்கள் 
முள்வேலி முகாம்கள் 
என அடுத்து வரும் எல்லாம் மனதைப் பிழியும் நிதர்சனங்கள்.

" நாங்க இருந்து  ஆண்ட பூமியெல்லாம் இல்லேன்டாங்க ! " எனும் முதுமையின் வார்த்தைகள் .... உள்ளத்தின் வலிகளின் வெளிப்பாடு.






பிளஸ்  - ஒளிப்பதிவு, இசை .
மைனஸ் - கருத்து அமைப்பு, திரைக்கதை வீரியம்.

வாழ்த்துக்கள் ! SHELLY


Srilanka = ஒரு முறை பயணம் செய்யலாம்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...