Wednesday, June 29, 2011

இவைகள் காதல் சொல்லும் கவிதைகள்

Copyright : favim.com

ன் அத்தனைத்
தவறுகளுக்குமான ....
மன்னிப்பு
உன் காதல்


Copyright : weheartit.com

ன்பே !
உன்
பார்வைக் கவிதைகளுக்காக
பத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்
இதய வெற்றுக்காகிதங்கள்.
  



ம் கண்களின் கல்யாணத்திற்கு - ஏனடி
என் இமைகளுக்கு விவாகரத்து...
சேர்த்து வைத்துவிடு  - நம்
முதலிரவில் அல்லது - என் 
முடிவிரவில்.


Copyright : photoblog.subpixel.eu

சுண்ணாம்பு அடிக்காமல் 
சுவற்றுச் சித்திரமாய் 
பாதுகாக்கப்படும் - என் 
சிறுவயதுக் கிறுக்கல்களாய் ...
உன் நினைவுகள் !



Copyright : http://www.fotokanal.com

ன்னவள்
வெட்டி
விட்டெறிந்த 
விரல் நகம் தான்- வானத்தின்
பிறை நிலவோ!!!


Copyright : Flickr


து !
என்னவோ தெரியவில்லை
காதல் கவிதைகள் எழுதும்
பேனாக்கள் மட்டும் 
நிரப்பப்படுகின்றன ....
காதலனின்
கண்ணீர் கொண்டு !!! 
  

Copyright : Flickr

பார்த்து செல்லடி - என் இதய சாலையில் 
பள்ளங்கள் பலவிருக்கும் - உன்னைப்
பார்த்து பார்த்து காதல் செய்ததால் !!



Copyright : Flickr


ன் உதட்டை பூட்டுகின்ற
உன்னத சாவி
அவள்  விழிகள்.

Copyright : Favim.com


ன்பே!
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.



Copyright : http://hdwallpaper9.com


ரோஜா இதழ் கூட சற்று கடினம் தான் ...
உன் இதழை ஒப்பிடுகையில்!
னித்துளியில் மறைந்திருக்கும் ரோஜா இதழ்கள் ;
நீ சற்று அனுமதி தந்தாள் ..
என் இதழ் பனியில் மறையும் உன் ரோஜா இதழ்கள் !!


Copyright : newpip.blogspot.com

ன்பே
மோதல்கள்  சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 

Sunday, June 26, 2011

ஜனனம்

Photo Courtesy : Arun

குறிப்பு எனது நன்றிகள் தோழர் அருண் அவர்களுக்கு .... அவர் அனுப்பிய புகைப்படத்திற்கு நான் எழுதிய வரிகள் .


றக்கப் போகும்
இரு ஜீவன்
இரக்கமில்லாமல்
இறப்பதற்காக
இன்னொரு ஜீவனை
ஈன்றெடுக்கும்
இன்பவிழா
ஜனனம் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Sunday, June 19, 2011

தமிழா ! தமிழோசைக் காண் !

copyright : Srikanthbfa
மிழே!
தேனே!
கனியே!
அமுதே!

சையில்லா மனிதனுண்டா ?
ஓசையில்லா மொழிகளுண்டா?
ஆசைகள் வளர்ச்சி தரும்;
பேராசை அழிவைத் தரும்.   
ஓசைகள் இன்பம் தரும்;
தமிழோசை அமுதம் தரும்.


ரு நாள் அதிகாலை
அணைத்து மொழிக்கூட்டம்.
மொழிகள் பேசியது - தம்மை
முன்னிலைப் படுத்திக் கொள்ள.

ங்கிலம்  சொன்னது
அகிலம் ஆள்பவன் நானென்று !
இந்தி சொன்னது
இந்தியாவின் மொழி தானென்று!
சமஸ்கிருதம் சொன்னது 
ஆண்டவனறியும் மொழி தாமென்று!
தமிழ் சொன்னது - உங்களின்
தாய் நானென்று !!!

லரும் மழலை கூறும் "அ"கரம்
முதுமை மொழியும் ஆயுதம்
பிறமொழியில் காணாத "ழ" கரம்
அப்பப்பா ....
தமிழ் எத்தனை இனிமை - இது
தமிழன் மொழி என்பது பெருமை.

சைக்கு உவமை குயில்
அது கூவும் மொழி தமிழ்.
மழைக்கு ஆடும் மயில்
அதுகுளிருக்கு  போர்வை தந்தது தமிழ்.
கருத்துக்கு முதன்மைப் பெறுவது குறள்
அதுபிறந்து வளர்ந்த மொழி தமிழ்.

ன்மையைச் சொல்ல வல்லினம்
மென்மையைச் சொல்ல மெல்லினம்
இடைப்பட்ட நிலைதான் இடையினம்.
றிவாயா நீ காரணம்?

ன்மைக் கொள் அதர்மம் தீண்டும் நேரத்தில் 
மென்மைக் கொள் காதல் தொடும் தருணத்தில்
இடையில் நில் கோபம் வரும் தீக்கணத்தில்.

னதின் ஓசை கேட்டால் ...
பகைமைக் கூட நட்பாகும்.
மழலை ஓசை கேட்டால்...
கோபம் கூட பாசமாகும்.
இயற்கையின் ஓசை கேட்டால் ...
கற்கள் கூட கவிதையாகும்...
தமிழின் ஓசை கேட்டால்...
தகரம் கூட தங்கமாகும்.

மிழா !
தமிழோசை காண்
மனதாசை வீண்
மணியோசை இனிது
தமிழோசை அமுது
குழலோசை கானம்
தமிழோசை ஞானம் 
மழலையோசை உன் படைப்பு
தமிழோசை அவன் படைப்பு.

மிழை தெரிந்தவன் கால் மனிதன்
தமிழை அறிந்தவன் அரை மனிதன்
தமிழை உணர்ந்தவன் முக்கால் மனிதன்
தமிழை காப்பவன் முழு மனிதன்.

தாயை மறந்தவன் தரம் கெட்டுப்  போவான்;
தமிழை மறந்தவன் தானழிந்து போவான்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Friday, June 17, 2011

இவ்வளவு அழகானதா இலங்கை ?

Copyright : tamilwin.com

குறிப்பு : நல்லதொரு முடிவை உலகம் எடுக்கட்டும் ; அதுவரை என் குருதி கொஞ்சம் கொதிக்கட்டும். போராடும் மாணவர்களுக்கு கிறுக்கல்கள்100 சார்பாக வணக்கங்கள்.

வ்வளவு அழகானதா இலங்கை !

ற்றை மரம்.
அதனைக் கடந்து செல்லும் ஒரேயொரு பறவை.
பசுமை பொங்கும் புல்வெளி
பனித்துளி படர்ந்த சிலந்தி வீடு
செவ்வானத்தையும் செம்மண்ணையும் இணைக்கும் புளுதிப்போர்வை

என முதல் சில நிமிடங்கள் அனைத்தும் கேமரா கவிதைகள். வாழ்த்துக்கள்

ழகை ரசிக்கும் பொழுதே, அழுகை தொட்டுவிடுகிறது நிதர்சனக் காட்சிகளால்.

ற்றாமையை விழிகளில் தாங்கும் தமக்கையும் தமையனும்
விழி இழந்த பெரியவர்
மென்சோகம் கொள்ளும் நிறைமாத தமிழச்சி
போரின் வடுக்கள்
கனவுகளைத் தேடும்  சிறார்கள் 
முள்வேலி முகாம்கள் 
என அடுத்து வரும் எல்லாம் மனதைப் பிழியும் நிதர்சனங்கள்.

" நாங்க இருந்து  ஆண்ட பூமியெல்லாம் இல்லேன்டாங்க ! " எனும் முதுமையின் வார்த்தைகள் .... உள்ளத்தின் வலிகளின் வெளிப்பாடு.






பிளஸ்  - ஒளிப்பதிவு, இசை .
மைனஸ் - கருத்து அமைப்பு, திரைக்கதை வீரியம்.

வாழ்த்துக்கள் ! SHELLY


Srilanka = ஒரு முறை பயணம் செய்யலாம்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, June 14, 2011

♥ குட்டி குட்டி காதல் கவிதைகள் ♥

Copyright : Transformers Film


நீயும் காலன் தானடி - என்
காதலை வதை செய்ததால்
நானும் பாவம் தானடி - உன்னை
நான் காதல் செய்ததால்.  


தேவதையே !
உன் நினைவுகள்
என்னில் வரும்பொழுதெல்லாம்
நானும் பைத்தியம் தான் - என்
அறைசுவர்களுக்கு.


 
ன்பே! 
காகிதங்களின் காயங்கள்
கவிதைகள் தானடி - என்
இதயத்தின் காயங்கள் - நம்
காதல் தானடி !

 


    -   சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

ஏனடி ! இப்படி அழகானாய் ?

Copyright : http://safa.tv


னடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ! ( பல்லவி )

ரைநொடி வாழ்தால் கூட - உன் 
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.  ( சரணம் - 1 )

பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ. ( சரணம்  -  2  )

சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி. ( சரணம் - 3  )

கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய்.    ( சரணம் - 4  )

முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! ( சரணம் - 5  )

 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, June 1, 2011

உதிர்ப்பவள் நீ !

Copyright : 1x.com


ழை ஒதுங்கும் மாலை நேரத்தில் 
மரத்தினடியில் நான் ஒதுங்க - நீ 
விளையாட்டாய் ....  
கிளை உலுக்கி உதிர்த்துவிட்டு போன 
மழைத்துளிகளாய் ....
உன் நினைவுகள் !

திர்ப்பவள் நீ 
நனைபவன் நான் !


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...