Monday, September 5, 2011

தொடும்தூரம் நீயில்லை !

Copyright : .tumblr.com
பல்லவி: 
தொடும்தூரம் நீ இல்லை ;
தொலைதூரம் தான் தொல்லை.
தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம்
தொட்டுப் பார்க்கிறதடி உன் கொலுசு.

சரணம்:1
முத்தம் கேட்டு இம்சித்ததில்லை - உன்னை
சத்தம் போட்டு வைததுமில்லை.
நித்தம் உன்னை நினைத்ததுமில்லை - நின்னை
நினைக்காத நாள் என் வாழ்விலில்லை.

சரணம்:2
முகம் பார்த்து பேசியதில்லை;
முகப்புத்தகத்திலும் பேசியதில்லை.
முல்லைப் பூவடி உன்னுதடு;
முத்தம் கேட்டு வாடுதடி என்னுதடு.

சரணம்:3
காலம் பிரித்து வைத்த காதல்;
காயம் தந்து வைத்த காதல்.
காமன் எட்டி நின்ற காதல்;
காலன் விட்டு நின்ற காதல்.

சரணம்:4
றக்கும்வரை காதல் வாழ்வதில்லை;
இறந்தபின்பு காதல் சாவதில்லை. - நான்
இருக்கும் நொடி காதல் வீழ்வதில்லை - உன்னை
எரிக்கும்நொடி காதல் காதலில்லை.


 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


2 comments:

  1. " முல்லைப் பூவடி உன்னுதடு;முத்தம் கேட்டு வாடுதடி என்னுதடு"அருமை அன்பரே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...