Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Sunday, October 16, 2011

மருத்துவக்கல்லூரி மர்மங்கள் !

 
" மருத்துவமனைகளெல்லாம்
மரணத்திற்கு எதிராக பொய்யாகவே போராடிக்கொண்டிருக்கின்றன! "

வைரமுத்துவின் ஆழமான வரிகள்; உண்மை வரிகளும் கூட ! மருத்துவமனைகள் கோவிலாக போற்றப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், அதன் இன்றைய சூழலோ சற்று கேள்விக்குரியது தான். பணம் படைத்தவனுக்கு தனியார் மருத்துவமனைகள் எனவும், தினம் உழைப்பவனுக்கு அரசு மருத்துவமனைகள் எனவும் எழுதப்படாத சட்டம், நம் இந்திய திருநாட்டில் நடைமுறையில் உள்ளது, அதற்கு தமிழக மருத்துவமனைகள் மட்டும் விதிவிலக்கல்ல !

ரூ.400 கூட மாதச்சம்பளம் வாங்க முடியாத ஏழைத்தமிழனிடம் லஞ்சம் பிடுங்கப்படுகிறது நானூறுக்கும் மேலாக. இதைச் செய்பவர்கள் கல்லூரி முதல்வர்களோ, மருத்துவக் கண்காணிப்பாளர்களோ, துறைத்தலைவர்களோ அல்ல  தூக்குப்படுக்கைத் (Stretcher ) தள்ளுபவர்களும் சக்கர நாற்காலி ( Wheel Chair ) தள்ளுபவர்களுமான கடைநிலை ஊழியர்கள் (MNA - Male Nursing Assistant & FNA - Female Nursing Assistant ). தற்பொழுதைய நிலவரப்படி அவர்களின் விலைப்பட்டியல் இதோ உங்கள் முன்.

  • Stretcher அல்லது Wheel Chair  தள்ள - ரூ.450
  • Wound Dressing செய்ய - ரூ.50
  • இதர உதவிகளுக்கு - ரூ.50  முதல் ரூ.500 வரை .

ப்படியாக ஒரு நாளைக்கு தோராயகமாக பத்து நோயாளிகளை அறுவை அரங்கத்தில் இருந்து படுக்கை பிரிவிற்கு மாற்றுவதற்கு ரூ.4500 லஞ்சமாக வாங்கப்படுகிறது. அதோடு இவர்களுக்கு அரசு அளிக்கும் சம்பளம் ரூ.10 ,000க்கு மேல். மேலார்ந்த பெரியவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய சம்பள விவரங்கள்.
  • பயிற்சி மருத்துவரின் மாதச்சம்பளம் - ரூ.7400
  • முதுகலை மாணாக்கரின் மாதச்சம்பளம் - ரூ.30,000

டித்த மருத்துவர்களைக் காட்டிலும் இவர்களின் சம்பளமும், அதிகாரமும் அரசு மருத்துவமனைகளில் அதிகம் தான்.

ண்மையில் இரண்டு ஊழியர்களை ஏதோ ஒரு அரசு மருத்தவமனையில் லஞ்சம் வாங்கியதற்காக தற்காலிகமாக பணியில் இருந்து அக்கல்லூரியின் மருத்துவக்கண்காணிப்பாளர் நீக்கியுள்ளார். இது வரவேற்க வேண்டியது என்றாலும், இத்தகைய லஞ்சப்பேர்வழிகளைக் களைய மருத்துவமனைகள் யாதொரு நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது வருத்தமே !

குறைகளைக் கண்டுகொள்ள வேண்டிய நிர்வாகம் , காங்கிரஸ் ஆட்சி போல் மௌனம் காத்தால் மக்களின் நலம் தான் வீணாகும். இதில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அதோடு சற்று வருத்தமும் தருவது அந்த ஊழியர்கள் உபயோக்கிக்கும் வார்த்தைகள் ! நோயாளிகளின் உறவினர்களிடம் நோயாளிகளை அறுவை அரங்கத்திற்கு செல்லும் முன் காண்பித்து, " அங்க பார்தீங்கள ! ரெண்டு பெரிய டாக்டர் , ரெண்டு சின்ன டாக்டர் , ரெண்டு நர்ஸ் ... நீங்க தர காசு எல்லாம் இவங்களுக்கு தான் போகுது ! எல்லோரும் வாங்கின பிறகு எங்களுக்கு மிஞ்சுறது ஏதோ அஞ்சோ பத்தோ தான் ! " இதில் யார் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பது கூடவா தெரியாமல் சுழல்கிறது மருத்துவ உலகம்.

க்கள் சமுதாயத்தின்கண் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலமாகவும், அதிகாரம் பொருந்தியவர்கள் அடங்கி போகாமல் இருப்பதாலும் இதைக் களைய முடியும், கண்ணீரைத் துடைக்க இயலும். சிந்திக்க வேண்டியது நம் அனைவர் கைகளிலும் உள்ளது. இதனை எடுத்துரைக்க மருத்துவன் என்ற பட்டம் தேவையில்லை ; மனிதன் என்ற உணர்வு இருந்தால் போதும். விழித்திடு தமிழா !


" உயிரைக் காக்கும் உன்னத சாலையில்;
உழைப்பை உறுஞ்சும் ஊழல் வேர்கள். "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





Thursday, May 26, 2011

எங்கே போனது திண்ணை ?

Copyright : xavi.wordpress.com


" வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா 
வழிப்போக்கன் வந்துதான் தங்கி செல்லுவான் சும்மா "  

என்ற நா.முத்துகுமாரின் வரிகளைக் கேட்ட பொழுது தான் சுரீர் என்று உரைத்தது. நம் கலாச்சாரம் காலத்தால் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று.எவனோ ஒரு வழிபோக்கனுக்காக தன் இல்ல வடிவமைப்பில் இடம் கொடுத்த தமிழனின் கட்டடக்கலைக்கு முன்னால் உலக அதிசயங்களும் எனக்கு அற்பம் தான்.இன்றைய சூழலில் எங்கேனும் திண்ணை வைத்த வீடுகளை நான் பார்க்க நேர்ந்தால் அதிசயிப்பது உண்டு.

சிறு வயதில் என் அம்மாச்சி வீட்டிற்கு செல்லும் போது இத்திண்ணைகளின் தரிசனம் எனக்குக் கிட்டும். அந்த இளம் பருவத்தில் எங்கள் பொழுதுபோக்குகள் அனைத்தும் இத்திண்ணையில் தான். அங்கு தான் நான் தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி போன்ற கிராமத்துக்கு உரித்தான விளையாட்டுகளை நான் விளையாடியதுண்டு. என்னுடைய் அழுகையையும் ஆனந்தத்தையும் திண்ணையோடு பகிர்ந்து கொண்ட காலமது.சில சமயங்கள் நான் ஊருக்கு செல்லும் பொது அந்த கால சாகுபடிக்கு ஏற்ப நெல்லோ, கம்போ, பருத்தியோ, உளுந்தோ ... மூட்டைகளாக அடுக்கப்பட்டிருக்கும். அப்பொழுது எல்லாம் அந்த மூட்டைகளின் மேல் எனக்கு கோபம் கோபமாக வரும் . பிறகென்ன, எங்களுக்கான இடம் பறிக்கப்பட்டால் கோபம் வராதா ?

ம்மாச்சி வீட்டிற்கு உறவினர்கள் அதிகம் பேர் சென்றிருந்தார்கள் என்றால், பெண்கள் எல்லாம் உள்ளே ; ஆண்கள் எல்லாம் திண்ணையில் தான். அன்று அளவறியா சந்தோசத்தில் நானும் என் சகாக்களும் இருப்போம். அதன் காரணம் ஏன் என்று இன்று வரை நான் அறியேன்.மாலைப்பொழுதுகளில் , திண்ணையில், அத்தை மடியில் தலைவைத்துத் தெருவில் செல்பவர்களை வேடிக்கை பார்ப்பது என் சிறு வயது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.அப்பொழுது எதிர்வீட்டு திண்ணைகளில் வயசான பெருசுகள் தத்தம் பழங்கதைகளைச்  சொல்லிக்கொண்டிருக்கும். அப்படி என்னதான் அவர்கள் பேசுவார்கள் என்று அந்த வயதில் நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அதனால் தான் என்னவோ அரட்டையடிக்கும் பல வலைப்பூவிற்கும், ஞானி போன்ற எழுத்தாளர்களின் வலைத்தளங்களிலும் " திண்ணை " என்ற சொல் துரிதமாய் பயன்படுத்தப் படுகிறது." திண்ணைப்பள்ளிக்கூடங்கள் " தென்னிந்தியாவில் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. திண்ணைகள் நம் கலாச்சாரத்தின் எச்சம்.

சில மாதங்களுக்கு முன்பு நான் " தக்க்ஷின் சித்ரா " சென்றிருந்த போது செட்டிநாட்டுத் திண்ணைகளைப் பார்த்தேன். எனது நண்பர்கள் உள்ளே செல்ல நான் மட்டும் அந்த திண்ணையில் அமர்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதின் பாதையில் நடந்துவிட்டு சென்றன. சன்னல் ( MICROSOFT WINDOWS ) வழியே உலகைப் பார்க்கும் என் போன்ற இளைய சமூகத்திற்கு திண்ணைகள் தூரம் தான்.தனைப் படிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ! எங்கேனும் திண்ணையை நீங்கள் கண்டால் ஐந்து நிமிடம் அமர்ந்து விட்டு செல்லுங்கள்.

" உறவுகள் மறந்த உலகில் உறவுகளை உணர்வீர்கள் "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...