Sunday, July 3, 2011
Friday, July 1, 2011
நீயும் வீணே !
COPYRIGHT : Carol VanHook |
உன்னில் பெரியவனும் இல்லை;
உன்னில் சிறியவனும் இல்லை.
உறுப்படியான இவ்வுலகில் உனக்கு
உறுப்படியாய் எதுவும் இல்லை.
பிறப்பது ஓர் நாள்
இறப்பது ஓர் நாள் -மற்றவை
எல்லாம் உன் வாழ்நாள்.
பிறக்கையில் பிறந்தாய்
இறக்கையில் இறந்தாய்
இருப்பதில் என்ன இழந்தாய்.
கொடுக்காத கை வீணே ! - கொடுப்பதைக் கண்டு
ரசிக்காத கண் வீணே !
சிரிக்காத முகம் வீணே - பிறரை
அணைக்காத நீயும் வீணே !
கர்ணன் பற்றிப் பேசுகிறாய்
கடையேழு பற்றி பேசுகிறாய்
காலம் காலமாய் பேசுகிறாய்
கொடுப்பதில் மட்டும் யோசிக்கிறாய்
பிச்சை இட்டவன் இறைவன்
பிச்சை பெற்றவன் மனிதன்
பிச்சை கேட்பவன் "மனிதன்"
பிச்சையிட்டால் நீ இறைவன்.
மாறுமோ உன் மனம்!
தீறுமோ தீ குணம்!
சேருமோ நல் மனம்!
வாய்க்குமோ விண் குணம்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Wednesday, June 29, 2011
இவைகள் காதல் சொல்லும் கவிதைகள்
Copyright : favim.com |
என் அத்தனைத்
தவறுகளுக்குமான ....
மன்னிப்பு
உன் காதல்
Copyright |
அன்பே !
உன்
பார்வைக் கவிதைகளுக்காக
பத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்
இதய வெற்றுக்காகிதங்கள்.
என் இமைகளுக்கு விவாகரத்து...
சேர்த்து வைத்துவிடு - நம்
முதலிரவில் அல்லது - என்
சுண்ணாம்பு அடிக்காமல்
சுவற்றுச் சித்திரமாய்
பாதுகாக்கப்படும் - என்
சிறுவயதுக் கிறுக்கல்களாய் ...
என்னவள்
வெட்டி
விட்டெறிந்த
விரல் நகம் தான்- வானத்தின்
பிறை நிலவோ!!!
அது !
Copyright : Flickr |
அது !
என்னவோ தெரியவில்லை
காதல் கவிதைகள் எழுதும்
பேனாக்கள் மட்டும்
நிரப்பப்படுகின்றன ....
காதலனின்
அன்பே!
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.
Copyright : http://hdwallpaper9.com |
ரோஜா இதழ் கூட சற்று கடினம் தான் ...
உன் இதழை ஒப்பிடுகையில்!
பனித்துளியில் மறைந்திருக்கும் ரோஜா இதழ்கள் ;
நீ சற்று அனுமதி தந்தாள் ..
என் இதழ் பனியில் மறையும் உன் ரோஜா இதழ்கள் !!
Copyright : newpip.blogspot.com |
அன்பே
மோதல்கள் சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
மோதல்கள் சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Sunday, June 26, 2011
Subscribe to:
Posts (Atom)