Sunday, July 3, 2011

எனது தத்துவங்கள்




பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தோடு நடக்கும் காதல் திருமணங்களில் காதலர்களின் வைராக்கியத்தைக் காட்டிலும் பெற்றோர்களின் பெருந்தன்மையையே என்னால் உணர முடிகிறது !!!
பெரிய வீட்டு பிள்ளைகளின் பத்திரிக்கை செலவிலே என் பல ஏழை நண்பர்களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுவிடுகின்றன !
" ஏழ்மை " என்ற ஒரு அடையாளம் போதும் என்னைக் குற்றவாளி என்று சமுதாயம் ஒப்புக் கொள்ள !
 
ஆடவர்கள் அறியாமால் உரசினால் கூட அதட்டிக் கேட்கும் ஆண்கள் சமூகம், பெண்கள் உரசினால் மட்டும் பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறது !
தாய்மொழியில் பேசும், புனையும் ஆர்வத்துக்காக என்னை அவமானப்படுத்த முயல்கிறது இந்தச் சமூகம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
உறவுகளும் உணர்வுகளும் மென்மையானவை . உடைத்து விடாதீர்கள் !
 
தவம் செய்யாமல் கிடைத்த வரம் காதல்
தவறு செய்யாமல் கிடைத்த சாபமும் காதல்.
 
என்னை நானே உயர்த்திக் கொள்ள முயல்கிறேன் . அப்பொழுது தானே ! என்னை நாடும் நண்பர்களுக்கு என்னால் உதவ முடியும். பணத்தால் மட்டுமல்ல .... மனத்தால் கூடவும் .
வறுமை வரைந்த வார்த்தைகளுக்கு மட்டும் தான் ....
வலியும் அதிகம்; வலிமையையும் அதிகம் .
 
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்தாதீர்கள். "
"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம்
அறிவுக்கு மட்டும்தான் "
  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Friday, July 1, 2011

நீயும் வீணே !

COPYRIGHT : Carol VanHook


ன்னில் பெரியவனும் இல்லை;
உன்னில் சிறியவனும் இல்லை.
உறுப்படியான இவ்வுலகில் உனக்கு
உறுப்படியாய் எதுவும் இல்லை.

பிறப்பது ஓர் நாள்
இறப்பது ஓர் நாள் -மற்றவை 
எல்லாம் உன் வாழ்நாள்.
பிறக்கையில் பிறந்தாய்
இறக்கையில் இறந்தாய்
இருப்பதில் என்ன இழந்தாய்.

கொடுக்காத கை வீணே ! - கொடுப்பதைக் கண்டு
ரசிக்காத கண் வீணே !  
சிரிக்காத முகம் வீணே - பிறரை 
அணைக்காத நீயும்  வீணே !

ர்ணன் பற்றிப் பேசுகிறாய் 
கடையேழு பற்றி பேசுகிறாய்
காலம் காலமாய் பேசுகிறாய்
கொடுப்பதில் மட்டும் யோசிக்கிறாய்

பிச்சை இட்டவன் இறைவன் 
பிச்சை பெற்றவன் மனிதன்
பிச்சை கேட்பவன் "மனிதன்"
பிச்சையிட்டால் நீ இறைவன்.

மாறுமோ உன் மனம்!
தீறுமோ தீ குணம்!
சேருமோ நல் மனம்!
வாய்க்குமோ விண் குணம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
 

Wednesday, June 29, 2011

இவைகள் காதல் சொல்லும் கவிதைகள்

Copyright : favim.com

ன் அத்தனைத்
தவறுகளுக்குமான ....
மன்னிப்பு
உன் காதல்


Copyright : weheartit.com

ன்பே !
உன்
பார்வைக் கவிதைகளுக்காக
பத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்
இதய வெற்றுக்காகிதங்கள்.
  



ம் கண்களின் கல்யாணத்திற்கு - ஏனடி
என் இமைகளுக்கு விவாகரத்து...
சேர்த்து வைத்துவிடு  - நம்
முதலிரவில் அல்லது - என் 
முடிவிரவில்.


Copyright : photoblog.subpixel.eu

சுண்ணாம்பு அடிக்காமல் 
சுவற்றுச் சித்திரமாய் 
பாதுகாக்கப்படும் - என் 
சிறுவயதுக் கிறுக்கல்களாய் ...
உன் நினைவுகள் !



Copyright : http://www.fotokanal.com

ன்னவள்
வெட்டி
விட்டெறிந்த 
விரல் நகம் தான்- வானத்தின்
பிறை நிலவோ!!!


Copyright : Flickr


து !
என்னவோ தெரியவில்லை
காதல் கவிதைகள் எழுதும்
பேனாக்கள் மட்டும் 
நிரப்பப்படுகின்றன ....
காதலனின்
கண்ணீர் கொண்டு !!! 
  

Copyright : Flickr

பார்த்து செல்லடி - என் இதய சாலையில் 
பள்ளங்கள் பலவிருக்கும் - உன்னைப்
பார்த்து பார்த்து காதல் செய்ததால் !!



Copyright : Flickr


ன் உதட்டை பூட்டுகின்ற
உன்னத சாவி
அவள்  விழிகள்.

Copyright : Favim.com


ன்பே!
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.



Copyright : http://hdwallpaper9.com


ரோஜா இதழ் கூட சற்று கடினம் தான் ...
உன் இதழை ஒப்பிடுகையில்!
னித்துளியில் மறைந்திருக்கும் ரோஜா இதழ்கள் ;
நீ சற்று அனுமதி தந்தாள் ..
என் இதழ் பனியில் மறையும் உன் ரோஜா இதழ்கள் !!


Copyright : newpip.blogspot.com

ன்பே
மோதல்கள்  சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 

Sunday, June 26, 2011

ஜனனம்

Photo Courtesy : Arun

குறிப்பு எனது நன்றிகள் தோழர் அருண் அவர்களுக்கு .... அவர் அனுப்பிய புகைப்படத்திற்கு நான் எழுதிய வரிகள் .


றக்கப் போகும்
இரு ஜீவன்
இரக்கமில்லாமல்
இறப்பதற்காக
இன்னொரு ஜீவனை
ஈன்றெடுக்கும்
இன்பவிழா
ஜனனம் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...