Sunday, July 3, 2011
Friday, July 1, 2011
நீயும் வீணே !
COPYRIGHT : Carol VanHook |
உன்னில் பெரியவனும் இல்லை;
உன்னில் சிறியவனும் இல்லை.
உறுப்படியான இவ்வுலகில் உனக்கு
உறுப்படியாய் எதுவும் இல்லை.
பிறப்பது ஓர் நாள்
இறப்பது ஓர் நாள் -மற்றவை
எல்லாம் உன் வாழ்நாள்.
பிறக்கையில் பிறந்தாய்
இறக்கையில் இறந்தாய்
இருப்பதில் என்ன இழந்தாய்.
கொடுக்காத கை வீணே ! - கொடுப்பதைக் கண்டு
ரசிக்காத கண் வீணே !
சிரிக்காத முகம் வீணே - பிறரை
அணைக்காத நீயும் வீணே !
கர்ணன் பற்றிப் பேசுகிறாய்
கடையேழு பற்றி பேசுகிறாய்
காலம் காலமாய் பேசுகிறாய்
கொடுப்பதில் மட்டும் யோசிக்கிறாய்
பிச்சை இட்டவன் இறைவன்
பிச்சை பெற்றவன் மனிதன்
பிச்சை கேட்பவன் "மனிதன்"
பிச்சையிட்டால் நீ இறைவன்.
மாறுமோ உன் மனம்!
தீறுமோ தீ குணம்!
சேருமோ நல் மனம்!
வாய்க்குமோ விண் குணம்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Wednesday, June 29, 2011
இவைகள் காதல் சொல்லும் கவிதைகள்
Copyright : favim.com |
என் அத்தனைத்
தவறுகளுக்குமான ....
மன்னிப்பு
உன் காதல்
Copyright |
அன்பே !
உன்
பார்வைக் கவிதைகளுக்காக
பத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்
இதய வெற்றுக்காகிதங்கள்.
என் இமைகளுக்கு விவாகரத்து...
சேர்த்து வைத்துவிடு - நம்
முதலிரவில் அல்லது - என்
சுண்ணாம்பு அடிக்காமல்
சுவற்றுச் சித்திரமாய்
பாதுகாக்கப்படும் - என்
சிறுவயதுக் கிறுக்கல்களாய் ...
என்னவள்
வெட்டி
விட்டெறிந்த
விரல் நகம் தான்- வானத்தின்
பிறை நிலவோ!!!
அது !
Copyright : Flickr |
அது !
என்னவோ தெரியவில்லை
காதல் கவிதைகள் எழுதும்
பேனாக்கள் மட்டும்
நிரப்பப்படுகின்றன ....
காதலனின்
அன்பே!
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.
Copyright : http://hdwallpaper9.com |
ரோஜா இதழ் கூட சற்று கடினம் தான் ...
உன் இதழை ஒப்பிடுகையில்!
பனித்துளியில் மறைந்திருக்கும் ரோஜா இதழ்கள் ;
நீ சற்று அனுமதி தந்தாள் ..
என் இதழ் பனியில் மறையும் உன் ரோஜா இதழ்கள் !!
Copyright : newpip.blogspot.com |
அன்பே
மோதல்கள் சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
மோதல்கள் சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Sunday, June 26, 2011
Sunday, June 19, 2011
தமிழா ! தமிழோசைக் காண் !
copyright : Srikanthbfa |
தேனே!
கனியே!
அமுதே!
ஆசையில்லா மனிதனுண்டா ?
ஓசையில்லா மொழிகளுண்டா?
ஆசைகள் வளர்ச்சி தரும்;
பேராசை அழிவைத் தரும்.
ஓசைகள் இன்பம் தரும்;
தமிழோசை அமுதம் தரும்.
ஒரு நாள் அதிகாலை
அணைத்து மொழிக்கூட்டம்.
மொழிகள் பேசியது - தம்மை
முன்னிலைப் படுத்திக் கொள்ள.
ஆங்கிலம் சொன்னது
அகிலம் ஆள்பவன் நானென்று !
இந்தி சொன்னது
இந்தியாவின் மொழி தானென்று!
சமஸ்கிருதம் சொன்னது
ஆண்டவனறியும் மொழி தாமென்று!
தமிழ் சொன்னது - உங்களின்
தாய் நானென்று !!!
மலரும் மழலை கூறும் "அ"கரம்
முதுமை மொழியும் ஆயுதம்
பிறமொழியில் காணாத "ழ" கரம்
அப்பப்பா ....
தமிழ் எத்தனை இனிமை - இது
தமிழன் மொழி என்பது பெருமை.
இசைக்கு உவமை குயில்
அது கூவும் மொழி தமிழ்.
மழைக்கு ஆடும் மயில்
அதுகுளிருக்கு போர்வை தந்தது தமிழ்.
கருத்துக்கு முதன்மைப் பெறுவது குறள்
அதுபிறந்து வளர்ந்த மொழி தமிழ்.
வன்மையைச் சொல்ல வல்லினம்
மென்மையைச் சொல்ல மெல்லினம்
இடைப்பட்ட நிலைதான் இடையினம்.
அறிவாயா நீ காரணம்?
வன்மைக் கொள் அதர்மம் தீண்டும் நேரத்தில்
மென்மைக் கொள் காதல் தொடும் தருணத்தில்
இடையில் நில் கோபம் வரும் தீக்கணத்தில்.
மனதின் ஓசை கேட்டால் ...
பகைமைக் கூட நட்பாகும்.
மழலை ஓசை கேட்டால்...
கோபம் கூட பாசமாகும்.
இயற்கையின் ஓசை கேட்டால் ...
கற்கள் கூட கவிதையாகும்...
தமிழின் ஓசை கேட்டால்...
தகரம் கூட தங்கமாகும்.
தமிழா !
தமிழோசை காண்
மனதாசை வீண்
மணியோசை இனிது
தமிழோசை அமுது
குழலோசை கானம்
தமிழோசை ஞானம்
மழலையோசை உன் படைப்பு
தமிழோசை அவன் படைப்பு.
தமிழை தெரிந்தவன் கால் மனிதன்
தமிழை அறிந்தவன் அரை மனிதன்
தமிழை உணர்ந்தவன் முக்கால் மனிதன்
தமிழை காப்பவன் முழு மனிதன்.
தாயை மறந்தவன் தரம் கெட்டுப் போவான்;
தமிழை மறந்தவன் தானழிந்து போவான்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Subscribe to:
Posts (Atom)