Wednesday, April 13, 2011

வகுப்பறை

Copyright : Wikipedia



ரியைத் தோற்கடிக்கும்
கருமை கொண்ட
கரும்பலகை

 பாலை மிஞ்சிவிடும்
வெண்மையைக் கொண்ட 
சுண்ணாம்புக்கட்டி

ருப்பரும் வெள்ளையரும்
இணைந்தால் தான் அழகு பெறும்
உலகம் அழகு பெறும்
என்பதை உணர்த்தும் இவையிரண்டும்

டுக்குகள் மாறாமல் 
அழகாய் அடுக்கப்பட்டிருக்கும்
மரப்பலகைகள்

வ்வப்போது தென்றலோடு கலந்துவரும்
ஆசிரியரின் தாலாட்டு

விழிக்க மனம் நினைத்தாலும்
ஒற்றுக் கொள்ளாமல்
போராட்டம் நடத்தும் இமைகள்

சிரியரின் வார்த்தைகளை
அவரை விடவும்
அழகாய் உச்சரிக்கும் என் நண்பர்கள்

நேற்று பார்த்த 
திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்சிகள், பாடல்கள்
மறுஒளிபரப்பு செய்யப்படும்
எங்கள் வகுப்பு அலைவரிசையில்...

லகப்போர் எங்கள் வகுப்பிலும்
சுண்ணாம்புக் குண்டுகளோடு.

ர்ச்சுனனின் அம்புகளுக்கு இணையான 
அம்புகளாய் - என் நண்பர்கள்
விடுப்புமணி அடித்தவுடன்

ல்லோரும் சென்ற பின்பு
ஏக்கத்துடன் ஏங்கியிருக்கும் ஒரு ஜீவன்
அது வேறு யாருமல்ல - எனது 
வகுப்பறை தான் !  



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

                     

Tuesday, April 12, 2011

மூக்கு

Copyright : Wikipedia


குறிப்பு : இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற   "அரங்கேறும் அங்கங்கள் "     கவியரங்கில் பதிவு செய்யப்பட்டு பாராட்டைப் பெற்றது. 

 ங்கீகரிக்கபடாத அங்கம்
அழகைச் சொல்ல அங்கம்
அறிவுக்குதவா அங்கம்
அவசியமில்ல அங்கம் - இவ்
அவையோரின் எண்ணம் - பலர்
அகத்தின் எண்ணமும் கூட !

ண்கள் கண்டதைக் காணச் சொல்லும்
செவிகள் வதந்திகள் கேட்கச் சொல்லும்
இதழ்கள் பொய்கள் பேசச் சொல்லும்
நாசி நல்லதை மட்டும் செய்யச் சொல்லும்.

னைத்து அங்கங்களும்
அழிவிற்கு வழிவிடும் - இவன் மட்டும் தான் 
ஆக்சிசனுக்கு வழிவிடுவான்.

ங்கங்கள் பழுதானவர்கள்
அகிலத்தில் உண்டு;
இவன் பழுதானவன்
எவ்வுலகினில் உண்டு.

பாண்டியனின் நாசி
நக்கீரர் புகழ் பாடச் செய்தது
சூர்ப்பநகையின் நாசி
இராமகாவியம் கூறச் செய்தது.

வமானத்தில் வீழ்பவனும் இவனே !
அகங்காரத்தில் எழுபவனும் இவனே !

" மூக்கிற்கு மேல் கோபம் " - அடைமொழி
காரணம்
அங்கத்தில் உயர்ந்தவன் மூக்கு.
அவனின் உயர்ந்தது உன் கோபமா?

வார்த்தைகள் மறித்துப்போகும் நேரத்தில் கூட
மூச்சுகள் பேசிக் கொள்ளும்.

யிரம் நட்சத்திரங்கள் ஆகாயத்தை அலங்கரித்தாலும்
மதியில்லையென்றால் மயக்கமில்லை.
ஆயிரம் அங்கங்கள் நம்மிடம் இருந்தாலும்
அலகு இல்லை என்றால் அழகு இல்லை.
 
விழிகள் ஓய்வு கொள்ளும் இமைமூடும் நேரத்தில்
இதழ்கள் ஓய்வு கொள்ளும் மௌனம் கொள்ளும் நேரத்தில்
செவிகள் ஓய்வு கொள்ளும் அமைதி உலவும் நேரத்தில்
கை, கால்கள் ஓய்வு கொள்ளும் துயில்பயிலும் நேரத்தில்
இவனும் ஓய்வு கொள்வான் இதயம் உறங்கும் நேரத்தில்.

வனிடம் பேசாதவர்கள் உண்டா?
மலர்கள் பேசும்; மணங்கள் பேசும்/
ஏன்!
கைக்குட்டை கூட பேசும்
ஜலதோஷம் வரும் பொழுது...

வானத்தின் நட்சத்திரம் 
தமிழச்சியின் மூக்குத்தி
அங்கத்தின் நட்சத்திரம் 
அவளுடைய மூக்கு.

ங்கங்கள் செத்துவிட்டால்
நாம் சாவதில்லை
இவன் செத்து விட்டால்
நாம் வாழ்வதில்லை

நேசிக்க மறந்தவர்கள் கூட சுவாசிக்க மறப்பதில்லை
சுவாசிக்க மறந்தவர்களை நாம் நேசிக்க நினைப்பதில்லை !!

மூச்சை துறந்தவனும் மனிதனல்ல!
மூக்கை மறந்தவனும் மனிதனல்ல !!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





பின் குறிப்பு

Copyright : souvenirsfromgreece.com


ம்பது பவுன் நகை வேண்டாம்
அடுக்குமாடி வீடு வேண்டாம்
அழகான கார் வேண்டாம்
அளவற்ற பொருட்கள் வேண்டாம்
வரதட்சணையாய் - வேண்டுமொன்று-
அவள்

பின் குறிப்பு : கற்போடும் ... காதலோடும் ...




-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Tuesday, April 5, 2011

சமர்ப்பணம்


டல் ஈந்த என்னருமை பெற்றோருக்கும்
உயிர்  ஈந்த நம்மில் உயர்ந்த இறைவனுக்கும்
அறிவிலியை அறிவொளியாய்  மாற்றிய ஆசானுக்கும்
தடையின்றி என் எழுத்தில் வரும் தங்கத் தமிழுக்கும்
கரம் பற்றி வழி நடத்தும் உறவுக்கும்
கண்ணீர் கண்டு கண் துடைக்கும் நட்புக்கும் – என்
கிறுக்கல்களை முத்தமிடும் உங்கள் கண்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்!!
கவிதைகளையல்ல…..
சிதறல்களை.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



ஒரு தலைக் காதல்

Copyright : www.lovegurusrm.in


ம் காதல் என்றுமே
கானல் நீர் !
நான் மகிழ்வதோ நீரென்று
நீ நினைப்பதோ நிஜமன்றென்று.

ண்மையில் நான் தான் வெகுளி
உலக இயல்பு தெரியாத கோமாளி
அன்பை நாடும் அறிவிலி – மொத்தத்தில்
நீ ஒரு அறிவாளி.

ன்னுடன் உலகம் சுற்ற வேண்டும் – என்று
ஓராயிரம் முறை நினைத்திருக்கிறேன்;
உண்மையில் உன் உலகில்
ஓர் மூலையில்கூட நானில்லை – என்று
அண்மையில் தான் உணர்ந்திருக்கிறேன்.

ன்னுடைய நட்பு வட்டம்
உன்னுடைய நலம்விரும்பிகள்
உன்னுடைய ஆதரவாளர்கள்
உன்னுடைய அன்புக்குரியவர்கள்
அனைவருக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ அறிவாய்
இவனுக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ மறைப்பாய்.

ன்னை சந்திக்கும் பல சமயங்களில்
மௌனம் மட்டும் என் மொழியாக …
புன்னகை மட்டும் உன் பதிலாக.

காதல் பிச்சை ” கேட்கிறேன் – அது ஏனோ
தெரியவில்லை – என்னிடம் வரும் பொழுது மட்டும்
உனது பைகளில் பணமிருப்பதில்லை.

செய்வதைக் காட்டிலும் சொல்வது மேலானது
அன்பில்லா இடத்தில்…
சொல்வதைக் காட்டிலும் செய்வது மேலானது
அன்புள்ள இடத்தில்;

நீயே முடிவு செய்து கொள்
சொல்வதா! செய்வதா! என்று.

நான் தவறானவன் தான் – உன்
தகுதிக்கு குறைவானவன் தான்.
அறிவுக்குத் தெரிகிறது – பாவம் என்
அகம் மட்டும் அழுகிறது.
படிப்பிலும், பண்பிலும்,
பக்குவத்திலும், பழகுவதிலும் – நீ
புதியவள் – எனக்கு மட்டும்
புதிரானவள்.

ன் காதலும், கவிதையும் என்றுமே
உனக்கு நடிப்பு… – என்னை
நடிகனாய் அங்கீகரித்த முதல்
பல்கலைக்கழகமே
நன்றி !

ன்னுடையது
ஒரு தலைக் காதலா?
” இல்லை “
ன்று நீ சொல்லும் வரைக் காத்திருப்பேன்
ஒரு தலைக் காதலுடன் .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...