Monday, May 9, 2011

இது நம்ம பாட்டு தான் !

Photo Courtesy : Sathyaseelan Rajendran


குறிப்பு : கொஞ்சம் வித்தியாசமான நேரத்துல தான் இந்த கவிதை எழுதுற சூழல் எனக்கு வந்துச்சு. எங்க Batch Day ... எப்பொழுதும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம்னு யோசிச்சோம் . சரி ஒரு பாட்டு compose பண்ணுனா என்னான்னு தொன்றிணப்ப தான் ... இந்த வரிகள் . உங்க Mind Voice எனக்கு புரியுது ! எதுப்பா ? உங்க Batch அப்படின்னு தானே கேக்குறீங்க ! என்னோடது 2006 Batch of Thanjavur Medical College. And I am proud to Say My Batch name ... Ya We are VALIANTZ .


ட்பென்னும் வலையைப் பிண்ணிகொண்டோம்
நட்புக்குள் நாங்கள் மாட்டிக் கொண்டோம்
நட்பாலே நாங்கள் வாழுகின்றோம் - எங்கள்
நட்பாலே பிறரை வாழ வைப்போம்.

ட்புக்கு அகராதி நாங்கள் தானே !
கர்ணனும் எங்கள் சீடன் தானே !
நட்பிற்கு தாஜ்மஹால் கட்டிவிட்டோம் - எங்கள்
கல்லூரி கற்களிலே கலந்து விட்டோம்.

சோகங்கள் கண்ணில் மழை பொழியும் - நண்பன்
கைவிரல் தானே துடைத்துவிடும்;
வெற்றிகள் தலையில் ஏறிக்கொள்ளும் - நண்பன்
குட்டுகள் தானே இறக்கி வைக்கும்.

னவுகள் மட்டும் காண மாட்டோம் - பலர்
கனவுகள் கனிந்திட வழிவகுப்போம்.
மருத்துவம் மட்டும் பார்க்க மாட்டோம் - பலர்
மனங்களில் மகனாய்/மகளாய் வாழ்ந்திடுவோம்.

ட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எந்நாளும் மாறாது இந்தக் கூட்டம்.




-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, May 7, 2011

உன்னைப் பற்றி ...

Copyright : Ganesamoorthy


குறிப்பு - இது என் பள்ளிக் கால நண்பன் கணேசமூர்த்திக்காக நான் 12 வகுப்பு படிக்கையில் எழுதப்பட்டது ! இக் கவிதையை அவனுக்காக மட்டும் அல்ல இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் , என் நட்பை நேசிக்கும் அனைவருக்கும்  சமர்ப்பணம். கல்லூரிப் பெண்கள் கவனத்திற்கு 'HE IS STILL SINGLE' !

ழகின் 
அகராதி

நட்பின்
இமயம்

புறத்தால்
கெட்டவன்

மனத்தால்
தூயவன்

படிப்பில்
பரவாயில்லை

நடிப்பில்
நடிகர் திலகம்

துடிப்பில்
இதயம்

பழகுவதில்
பால்

விலகுவதில்
விலாங்கு

பிடித்தது
காதல்

பிடிக்காதது
துரோகம்

புரிவது
பாசம்

புரியாதது
பாடம்

ஆடைகளில்
ஆணழகன்

இல்லாமல்
பேரழகன்

பேச்சில்
கனிவு

பாட்டில் 
தெளிவு                              

வீட்டில் 
நல்லபிள்ளை

விடுதியில்
கெட்டபிள்ளை      

இன்னும் சொல்ல 
என்னிடம் வார்த்தையில்லை
ஏன்?
தமிழிளுமே வார்த்தையில்லை .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Friday, May 6, 2011

சுமைகள்

Copyright : www.designzzz.com



த்தனை சுமைகள்
நம் மனித வாழ்வுதனில்...

பிறந்தவுடன்
அரைஞான்கயிறு ஒரு சுமை

ஓர் வயதில்
உடைகள் ஒரு சுமை

1 முதல் 5 வரை
உணவு ஒரு சுமை

5 முதல் 10 வரை
மருந்து ஒரு சுமை

10 முதல் 15 வரை
படிப்பு ஒரு சுமை

15 முதல் 20 வரை
பருவம் ஒரு சுமை

20 முதல் 25 வரை
பணம் ஒரு சுமை

25 முதல் 30 வரை
மனைவி ஒரு சுமை

30 முதல் 35 வரை
மக்கள் ஒரு சுமை

35 முதல் 40 வரை
உறவுகள் ஒரு சுமை

40 முதல் 50 வரை
பழைய பதிவுகள் ஒரு சுமை

50 க்கு மேல்
நாமே ஒரு சுமை

சுமைகளிருந்தாலென்ன
அதை சாதிக்கும்
தகைமை உன்னிடம் உள்ளதன்றோ?
பிறகேன் கவலை!

சுமைகளை 
உடைத்து சூடங்களாக்கி
உன் வெற்றிகளுக்கு 
ஆராதனை காட்டு !

- ஜெயம்
 

 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, April 28, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ...

Photo Courtesy : http://www.mnn.com


குறிப்பு - இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

ன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .
ச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

ன்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை 
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

ப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

ப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன் 
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

த்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

த்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.
னைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

ண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை 
அனுப்பி வைத்துவிட்டேன்.

ன்று ஒரு நாள் 
அநாதைச்  சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா 
அவன் சொன்னான்.

" தாய் -  தெய்வம்     
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"
மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.
 
தேடல் தான் வாழ்க்கை என்றான்  
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.
றுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

வன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.
மைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று 
நீ சிந்தியது போல.
தற்குள்  அவள் கேட்டு விடுவாள்; 
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"        

ன்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?
இதோ சொல்லி விடுகிறேன்
ன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.
ன் மகன் 
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Monday, April 25, 2011

பனித்துளி சங்கர்



குறிப்பு : இக்கவிதை என் இணைய நண்பர் பனித்துளி  சங்கர் மற்றும் அவர் தமிழுக்காக  ...
அவரின் வலைப்பூ முகவரி -  http://www.panithulishankar.com/

னித்துளி
புனிதமானது ....
பனித்துளி
அழகானது...
பனித்துளி
உண்மையானது...
பனித்துளி
மென்மையானது...

ண்பா!!!
பனித்துளி மை  கொண்டு
ஆழ்கடல் அறிவு சேர்க்கும்
அற்புதம் யாரிடம் கற்றாய் ?

ரை நொடி உன் வலை படித்தால்
ஆழ் மனதில் பூ பூக்கும் !!
அடுத்த நொடி உன்னை வாழ்த்த
ஆயிரம் வார்த்தைகள் கை கோர்க்கும் !

ன் தமிழுக்கு மட்டும் தான்
தரம் உண்டு ..
தரணியில் உள்ள தவறுகளை தட்டிக் கேட்க !!

தொலைவில் நீ இருந்தாலும் - உன்
தமிழ் மட்டும் நான்
தொடும் தூரத்தில் ...

கட்டாய் பேசித்திரிபவர்களுக்கு மத்தியில்
பண்பாய்  பேசும்
பனித்துளி ...

ன் மைத்துளி
பிரபஞ்சத்தின் அறிவுத்துளி
காதலர்களின் கண்ணீர்த்துளி
தமிழின் தேன்த்துளி 
முகிலின் மழைத்துளி
காமத்தின் உயிர்த்துளி
கடவுளின் கவித்துளி

மொத்தத்தில் உன்னை
முத்தமிட மறந்தவர்களுக்கு  மத்தியில்
முத்தமிடுகின்றன என் தமிழ்  - உன்
தமிழை !!! 


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...