Friday, June 17, 2011

இவ்வளவு அழகானதா இலங்கை ?

Copyright : tamilwin.com

குறிப்பு : நல்லதொரு முடிவை உலகம் எடுக்கட்டும் ; அதுவரை என் குருதி கொஞ்சம் கொதிக்கட்டும். போராடும் மாணவர்களுக்கு கிறுக்கல்கள்100 சார்பாக வணக்கங்கள்.

வ்வளவு அழகானதா இலங்கை !

ற்றை மரம்.
அதனைக் கடந்து செல்லும் ஒரேயொரு பறவை.
பசுமை பொங்கும் புல்வெளி
பனித்துளி படர்ந்த சிலந்தி வீடு
செவ்வானத்தையும் செம்மண்ணையும் இணைக்கும் புளுதிப்போர்வை

என முதல் சில நிமிடங்கள் அனைத்தும் கேமரா கவிதைகள். வாழ்த்துக்கள்

ழகை ரசிக்கும் பொழுதே, அழுகை தொட்டுவிடுகிறது நிதர்சனக் காட்சிகளால்.

ற்றாமையை விழிகளில் தாங்கும் தமக்கையும் தமையனும்
விழி இழந்த பெரியவர்
மென்சோகம் கொள்ளும் நிறைமாத தமிழச்சி
போரின் வடுக்கள்
கனவுகளைத் தேடும்  சிறார்கள் 
முள்வேலி முகாம்கள் 
என அடுத்து வரும் எல்லாம் மனதைப் பிழியும் நிதர்சனங்கள்.

" நாங்க இருந்து  ஆண்ட பூமியெல்லாம் இல்லேன்டாங்க ! " எனும் முதுமையின் வார்த்தைகள் .... உள்ளத்தின் வலிகளின் வெளிப்பாடு.






பிளஸ்  - ஒளிப்பதிவு, இசை .
மைனஸ் - கருத்து அமைப்பு, திரைக்கதை வீரியம்.

வாழ்த்துக்கள் ! SHELLY


Srilanka = ஒரு முறை பயணம் செய்யலாம்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, June 14, 2011

♥ குட்டி குட்டி காதல் கவிதைகள் ♥

Copyright : Transformers Film


நீயும் காலன் தானடி - என்
காதலை வதை செய்ததால்
நானும் பாவம் தானடி - உன்னை
நான் காதல் செய்ததால்.  


தேவதையே !
உன் நினைவுகள்
என்னில் வரும்பொழுதெல்லாம்
நானும் பைத்தியம் தான் - என்
அறைசுவர்களுக்கு.


 
ன்பே! 
காகிதங்களின் காயங்கள்
கவிதைகள் தானடி - என்
இதயத்தின் காயங்கள் - நம்
காதல் தானடி !

 


    -   சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

ஏனடி ! இப்படி அழகானாய் ?

Copyright : http://safa.tv


னடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ! ( பல்லவி )

ரைநொடி வாழ்தால் கூட - உன் 
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.  ( சரணம் - 1 )

பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ. ( சரணம்  -  2  )

சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி. ( சரணம் - 3  )

கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய்.    ( சரணம் - 4  )

முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! ( சரணம் - 5  )

 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, June 1, 2011

உதிர்ப்பவள் நீ !

Copyright : 1x.com


ழை ஒதுங்கும் மாலை நேரத்தில் 
மரத்தினடியில் நான் ஒதுங்க - நீ 
விளையாட்டாய் ....  
கிளை உலுக்கி உதிர்த்துவிட்டு போன 
மழைத்துளிகளாய் ....
உன் நினைவுகள் !

திர்ப்பவள் நீ 
நனைபவன் நான் !


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, May 28, 2011

நீ என்னடா பேசுற இங்கிலீஷ் ?



ன்பு ண்பர்களே ! நான் பல சமயங்களில் வியப்பில் ஆழ்ந்தது உண்டு . " எப்படிதான் இந்த Cricketers இவ்ளோ வேகமா இங்கிலீஷ் பேசுறாங்களோ " என்று.
நான் அவர்கள் போல் பேச பலமுறை முயற்சித்து தோற்றதும் உண்டு !

னக்குத் தெரிந்த பல பேர் தங்கள் மகனையோ ! மகளையோ ! மழலை மாறும் முன்பே ! SPOKEN ENGLISH CLASS இல் சேர்த்து விடுவது உண்டு. அவர்கள் தன் மக்கள் " அம்மா என்று அழைப்பதை விட , " Hi Mom & Dad ... How are you ? " என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார்கள். பல சமயங்களில் அவர்களைப் பார்த்து,
" தரங்கெட்ட தாய்மொழியா நம் தமிழ்மொழி ? " என்று வினவத் தோன்றும். 

னால் இந்தக் காணொளியைக் காணும் பொது , என்னையும் மீறி என் தமிழ் நாவு " ALL THE BEST RAJ. YOU HAVE A BRIGHT FUTURE ! MAY THE GOD BE WITH YOU " என்று தான் சொல்லத் தோன்றுகிறது.








ன் மனதைத் தைத்த ராஜின் வரிகள் ... " we don't have money what we do ... If we have money , we can buy Everything ! " .

றுமை வரைந்த வார்த்தைகள் அவை - அதில் 
வலியும் அதிகம் ; வலிமையையும் அதிகம். 


" ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் 
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று " 
- புறநானூறு .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...