Tuesday, April 5, 2011

அவள் என்(ன) அவள் ?

Photo Courtesy : http://www.picstopin.com

த்தான் என்
அன்னை வீடு செல்கிறேன் – என்னை
அவமதித்ததற்காக.

ப்படி என்னடி சொல்லிவிட்டேன்
“அரைவேக்காடு” என்று தானே!
அதுவும் உன்னைக் கூட இல்லை சாப்பாட்டைத்தான்
அதனால் உண்ணக் கூட  இல்லை சாப்பாட்டைத்தான்.

ந்த நாள் முதல் இந்த நாள் வரை
உப்பில்லை உரைப்பில்லை
கசப்பில்லை காரமில்லை
வேண்டுமென்றா செய்வார்கள் சமையல்
இவையெல்லாம் வேண்டாமென்று.

ன்பே! நான் உன்னைக் காதலித்த போது…
கவிதையே! என்று அழைத்தேனே
அதன் அர்த்தத்தை அறியாயோ?

விளக்கில் விழுந்த விட்டில்பூச்சியல்லவா நான்
விடை தெரியவில்லை
கூறுங்கள் விடையை….
தாருங்கள் விடுதலையை .

புகுந்த எழுத்துக்கள்
பிறந்த இடம் நோக்கிச் செல்லா:
கவிதையே! நீ மட்டும் உன்
பிறந்த இடம் செல்லலாமா?

த்தான் அவை
உயிரற்ற வார்த்தைகள் – நானோ
உயிருள்ள கவிதை.

பூவே! என்று உன்னை புகழ்ந்ததற்காக
வாடுகிறாயே வேண்டாதற்க்கெல்லாம்.
வார்த்தையால் உங்களை வெல்பவர் யாருமில்லை:
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
விடைபெறுகிறேன்.

றுதியாக இரு நிமிடம்.
முதல் நிமிடம் நம்
காதல் கல்லறையில் காகிதப்பூ நட்டுச்செல் – மறு நிமிடம்
அம்மலர்க் கொண்டு – என்
மரணத்திற்கு மலர்வளையம் வைத்துச்செல்.

ன்னடி யோசிக்கிறாய்…
காகிதப்பூக்கள் எதற்காக என்றா?
வாசமுள்ள மலர்கள் – உன்
வாசத்தை சுமந்து – என்
சுவாசத்தை உயிர்பிக்கும்
பிணமான நான்
பிரசவிக்க விரும்பவில்லை.

வையெல்லாம் என்னால் செய்ய இயலா…
ஏன் ?

ங்கள் உயிர்பிரிந்த நொடியில்
பிரியும் என் உயிர்
பிறகெப்படி இவையெல்லாம்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


புகைப்பிடிக்கலாமா?

©www.mos360.ru
ந்த கேள்விக்கான பதில் …..“இல்லை” என்பார்கள்  பெற்றோர்கள்;“ஆம்” என்பார்கள் கல்லூரிக் காளைகள்.திரைத்துரையைக்   கனவுத்தொழிற்ச்சாலை என்பார்கள். கல்லூரி கனவு உலகம். இங்கு அனைத்துமே அழகாகத்  தெரியும், தவறுகள் உட்பட.  Peer pressure , Style என  பல காரணங்களுக்காக  இளைஞர்களின் கைகளில் வளம் வருகிறான் இந்த சிகரட் எமன். 7G திரைப்படத்தில் ஒரு வசனம் இடம் பெறும்  “ நீ இழுத்து உப் உப் ன்னு விடுறியே! அது உங்க அப்பனோட ரத்தம் டா!” என்று. உண்மையில் அவன் இழுத்து விட்டுக்கொண்டிருப்பது அவனுடைய வாழ்நாளைத்தான்.
“ ஏன்டா! மச்சான் இப்படி தம் அடிச்சு உடம்ப கெடுத்துக்குற?” என்ற என்னுடைய கேள்விக்கு “Tension டா, Family problem, style மச்சி, love failure டா மாமு” என பல பதில்கள்.ண்பனுக்கான  வரையறை மீறி என்னால் பல சமயங்களில் அவர்களைத் திருத்த முடிவதே இல்லை. என் கண் முன்னே என் தோழர்கள் தங்களுடைய ஆயுளைக் குறைத்துக்கொள்வதை நான் வெட்கமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ரசாங்கம் தன்னுடைய அத்தனை அஸ்திரங்களைப் பயன்படுத்தினாலும் இந்த சிகரட் எமனை மட்டும் ஒழிக்க முடியவில்லை. அனைத்து கல்லூரிகளிலும்  புகைபிடித்தல் syllabus இல் இல்லாமலே கட்டயப்பாடமாகக்   கற்பிக்கப்படுகிறது.தின் உச்சகட்டம் , மருத்துவக்கல்லூரி  என்பது மனதிற்கு வேதனையாக  இருக்கிறது. “ ஊருக்கு தான் உபதேசம்” என்பது மருத்துவக்கல்லூரி  மாணவர்களுக்குத்  தான் நன்கு பொருந்தும்.
அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு  கூறுவது  என்னவென்றால்  உலகில்  புகைபிடிப்பதில்  50% பேர்  இளைஞர்கள். அதில்  20% பேர்  இளைஞிகள்.  இது  வளமான  வாழ்க்கைக்கு  வழி  வகுக்காது  என்பது  நிதர்சனமான  உண்மை.


புகைக்கிறாய் …. சாகிறாய் …..
உனது  உரிமை. உரிமை  என்பதை  விட  உனது  திமிரு  என்று  கூறலாம். அனால்  மற்றவர்கள். Passive Smoking, Public smoking மறைமுகமாக  பலரின்  வாழ்கையை  பதம்  பார்த்துக்  கொண்டிருக்கிறது.பொது  இடங்களில்  யாரேனும்  புகைப்பதைப்  பார்த்தால்  “பளார்” என்று  அரைய  வேண்டும்  போல்  தோன்றும். இருப்பினும்  நாகரீகம்  கருதி  நான்  செய்வதில்லை. நீங்களும்  என்னைப்  போல்  இருக்காதீர்கள் . பொது  இடங்களில்  புகைப்பவர்களைக்  கண்டால்  புரியச்  செய்யுங்கள்  இல்லை  புகார்  செய்யுங்கள் .புகைப்பவர்களே! உங்களால்  ஒரேயொரு  நன்மை  நாட்டின்  மக்கள்  தொகை  குறையும் . 


புகைக்காதீர்கள்! முடியவில்லை  என்றால்  பொது  இடங்களில்  புகைக்காதீர்கள்!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



அன்புள்ள ஆசானுக்கு !


Photo Courtesy - surajsanap.wordpress.com


ன்புள்ள ஆசானுக்கு,
அன்பு ததும்பும் வார்த்தைகளோடு – உங்கள்
மாணவன்.
பிழையிருந்தால் மன்னிக்கவும்;
பிடித்திருந்தால் விமர்சிக்கவும்.

ப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்புறமாய்…
அதிகமாய் வசைபாடியது நீங்கள்தான்.
அப்பொழுது நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை
அப்புறம் தான் தெரிந்தது;
அறிவிற்கு புரிந்தது.
அத்தனையும் அன்பின் வெளிப்பாடு – நான்
அறிந்தேன் உலகை ஆசானோடு.

வேர்கள் கண்ணில் தெரிவதில்லை
விழுதுகளை நம்பி அவை வாழ்வதில்லை.
வேர்கள் தாங்கள்;
விழுதுகள் நாங்கள்.

நாங்கள்
முன்னேறும் பொழுதெல்லாம்
முழுஉலகமும் பொறாமைப்படும்
முதல்வகுப்பு ஆசான் தான்
முன்னின்று பெருமைப்படுவார்.

ங்களை வைத்து உலகம் அறிந்தோம்
உங்களை வைத்து உலகம் படித்தோம்
உங்களை வைத்து உலகம் நினைத்தோம்
உங்களுக்காக புதுஉலகம் படைப்போம்.

யிரம் பள்ளிகள் கட்ட வேண்டாம்
அரைகோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டாம்
அத்தனை புண்ணியங்களும் – உங்கள்
அன்பு அதட்டலில்.

நீங்கள் பிரிகிறீர்கள்
உங்கள் பணியிடமிருந்து- ஆனால்
நாங்கள் பிரிகிறோம்
எங்கள் உயிரிடமிருந்து.

னக்கு ஒரு ஆசை
விபரீத ஆசை தான்.
விட்டில்பூச்சி நினைத்ததாம்
விண்மீன் ஆகவேண்டுமென்று
இதுவும் அது போன்று தான்.
ஒரு முறை பிறந்திட வேண்டும்
ங்களுக்கு முன்னால்…

ரு முறை அணைத்திட வேண்டும்
உங்களுக்கு அன்னையாய்…
ஒரு முறை மலர்ந்திட வேண்டும்
மனிதநேயம் கொண்ட மனிதனாய் ….
ஒரு முறை சிரித்திட வேண்டும்
சின்னஞ்சிறு மழலையாய்….
மொத்தத்தில்
ஒரு நாள் வாழ்ந்திட வேண்டும்
உங்களுக்கு ஆசானாய்.

ரேயொரு வேண்டுகோள்
என்றேனும் ஒரு நாள்
எங்கேனும் ஓரிடத்தில்
உங்கள் மாணவன் என்று நான் அறிமுகம் செய்கையில்
ஒரு முறையேனும் கேட்பீரோ?
” டேய்! ராஸ்கல் எப்படிடா இருக்க?” .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100






மரம் பேசுகிறது !

Photo Courtesy : Sudharshun Gopalan


வாருங்கள் மானிடர்களே 
வாருங்கள் ....
அடுத்தவர் அவஸ்தையில் 
அமிர்தம் உண்ணும் 
அன்பற்ற மானிடர்களே வாருங்கள் !

ன்ன யோசிக்கிறீர்கள் !
எதற்கு அழைக்கிறான் இந்த 
மரமடையன் என்றா ?
 பாருங்கள் உங்கள் 
பாதத்தின் அடியில் 
பாதாளத்தில் பரிதவிக்கும் எம் 
புதல்வர்களைப் பாருங்கள் !

தோ யாரங்கே ! 
சற்று நிறுத்தப்பா ...
நீ ! 
அறிவில் ஆதவன் தான் 
அதற்காக அந்த 
அறிவில்லாதவனை 
"மர மடையன்" என்று திட்டதே ! 
மண்ணோடு காதல் கொண்டு 
மழையோடு நட்பு கொண்டு 
மாலைத் தென்றலோடு உறவாடும் 
நாங்கள் மடையர்களா ? - அல்லது 
மண்ணுக்காக மடிந்து 
மதுக்காக மானமிழந்து 
மாதுக்காக மயங்கும் 
நீங்கள் மடையர்களா ? 
திருத்திக் கொள்ளுங்கள் உங்கள் 
திருவாய் மலர்ந்த வார்த்தைதனை 
அவன் 'மர மடையன்' அல்ல 
"மனித மடையன்."

ண்டு நூறுக்குமுன்
அஸ்தமித்து விடும்
அற்ப மானிடா!
ஆண்டுக்கொரு முறை நீ
அவதரித்த நாளைக் கொண்டாடுகிறாய்.
ஆண்டாண்டு காலமாய் இந்த
அவனியை அலங்கரிக்கும் எங்களுக்கு
“பர்த்டே கேக்” எப்போது செய்யப் போகிறாய்?

னிக்குடித்தனம் செல்லும்
வாழைகள்....
ஆலைத் தாங்க மறந்த
விழுதுகள்...
முகம் வாடிக் கிடக்கும்
மலர்கள்...
அடுத்தவர்க் குதவா
நாங்கள்...

ற்பனை செய்ய முடியுமா!
பிறகேன் நீங்கள் மட்டும்
இப்படி!

றறிவு கொண்ட உனக்கு
ஐந்தறிவு கொண்ட நான் அறிவுரை சொல்வதா! - து
இலக்கணத்திற்கு பொருந்தாத
இலக்கியம்.
இனியாவது திருந்துங்கள்.... எங்களை
இந்த உலகில் வாழ விடுங்கள்.

வ்வளவு கூறியும் அதோ ஒருவன் வருகிறான்...
கையில் எமனோடு...
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.




 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Monday, April 4, 2011

மழையில் இரு மழலைகள்

Copyright : http://www.tastywallpapers.in


முத்தமிட்டுக்கொள்ளும்
மேகங்களின் எச்சில் துளிகளாய் ...
மண்ணில் விழுந்தது
மழைத்துளி.

ழையைக் கண்டு
மனதை மூடிக் கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்….
மழைக்காக
மனிதர்களை மூடிக்கொள்ளும் – இந்த
மழலைகளை மதிப்போம்.

ழகான சோலை
அந்தி வேலை
ஆலமரத்தடி
ஆழிப்புதல்வர்கள்
அனைத்தையும் ரசிக்கும்
அழகான மழலைகள்
அங்கங்கள் மட்டும் அரவணைத்துக் கொள்ளாமல்.

ழையில் மழலைகள்
மனதில் ஆச்சரியமா?
ஆம்!
மழலைகளிடத்தில் பொய் வாழ்வதில்லை – இவர்கள்
மனங்களிடத்திலும் மெய் சாவதில்லை.

வர்கள்
மனங்களைப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மழலைகள்:
மனங்களைப் புதைக்கத் தெரிந்தவர்களுக்கு காதலர்கள்.

ழியின் நீர்பட்டு
அங்கங்கள் அரைகுறையாய் தெரிந்தாலும்
கண்கள் மட்டுமே – பேசிக்கொள்ளும்
அற்புதக் கலையல்லவா காதல்.

ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும்
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!

யற்கையை ரசிக்க இரு கண்கள் போதாது
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
மழைத்துளிகள் மரம் மேல் விழுந்து
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
உனக்கும் காதல் வரும்
மழையின் மீது மோகம் வரும். 
 
த்தங்கள் கூட சங்கீதமாகும்
மழைத்துளி மண்ணில் விழும்போது.. 
மௌனங்கள்  கூட ராகங்களாகும்
இருவிழி அன்பில் இணையும் பொது.
மௌனங்களாலேயே
மனதைப் படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
மழைத்துளி மறைந்தது
மனதில் பதியவில்லை.
மழை நின்றது.

வள் அவள் வீடு சென்றாள்
அவன் அவன் வீடு சென்றான்
மரம் மட்டும் அங்கேயே நின்றது
மற்றுமொறு  காதலர்களின் வரவுக்காக.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...