Showing posts with label தேர்வுக் கவிதைகள். Show all posts
Showing posts with label தேர்வுக் கவிதைகள். Show all posts

Monday, April 18, 2011

அட ! இன்னுமா தெரியவில்லை

Copyright : http://www.profimedia.com


ந்தோசமாய் மலர்ந்தது காலை - அந்த
சூரியனின் உதயத்தில் ...

ழக்கமாய் செல்லும் வகுப்பறைகள்
தினசரி வாசிக்கும் அதே முகங்கள்
எல்லாம் சரிவர இருந்தன முகத்தில் 
சந்தோசத்தைத் தவிர ...   

ந்நியர் போல் நண்பர்கள்
ஆளுக்கொரு திசையில்
அவரவர் புத்தகத்தோடு.  

முத்தமிட இதழ்களா தேவை?
அட! முத்தமிடுகின்றனவே  
விரல்களும் விழிகளும் 
புத்தகத்தின் பதிப்புகளோடு.

ச்சம், அடக்கம், அகங்காரம், அனுபவம்
அனைத்தும் காணலாம்
அவர்கள் விழிகளில் 
அன்று மட்டும்.

புத்தகத்தை சிறுபதிப்பு எடுத்து
சின்ன சின்ன இடைவெளிகளில்
சிதறாமல் ஒழித்து வைக்கும்
சில மாணவர்கள்    

மூளையை மட்டுமே நம்பி
முன்னுக்கு வரத் துடிக்கும்
முதல் மாணவர்கள்    

து நடந்தால் 
எனக்கென்ன என இருக்கும்
ஏராளமான மாணவர்கள் ! 

விதங்கள் ஆயிரமிருந்தாலும்
விழிகளில் ஒரே பயம் தான் .. 

திகாலை விழிப்பு
அரைகுறை சாப்பாடு
ஆண்டவநிடும் கோரிக்கை 
அவசரமாய் புரட்டிய பக்கங்கள்
அனைவரின் ஆசீர்வாதம்
அன்று மட்டும் பேசாத அவர்கள்
எல்லாம் இந்நாளின் சிறப்பு நிகழ்சிகள் !

 
த்தனை சிரமங்களுக்கு நடுவிலும்
அவர்களின் அவ(ள்/ன்)கள் சொல்லும்
ALL THE BEST ற்காக காத்திருந்த அவர்கள் !   

ட ! இன்னுமா தெரியவில்லை 
இன்று தான் அவர்களுக்கு பரீட்சை !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...