Showing posts with label சோகக் கவிதைகள். Show all posts
Showing posts with label சோகக் கவிதைகள். Show all posts

Tuesday, May 17, 2011

❧ அப்பா ❧

Copyright : ftp.cdc.gov


குறிப்பு : இக்கவிதை என் நண்பன் கோகுலின்  தந்தை எங்களை விட்டுப் பிரிந்த பொழுது எழுதியது. இதுவரை அவனுக்கு நான் இக்கவிதையை அனுப்பி வைக்கவில்லை ! முதல் முறையாக உங்களுக்காக ....


ன்பு நண்பனே!
ஆறுதல் கூற வயதில்லை
இருப்பினும்....
ஆசை - என் 
அன்பு நெஞ்சம் 
ஆழ்ந்த வருத்தத்தில் - நம்
அன்பு அப்பா 
மறைந்த  நினைவினில் ...

ன் வார்த்தையால் 
உன்  வருத்தத்தை 
விலக்க இயலா !
நீ
அடைந்த மதிப்பெண்கள் 
படிக்கும் கல்லூரி
பார்க்கும் வேலை
கிடைக்கும் சம்பளம்
வாழ்க்கையின் சந்தோசங்கள் 
யாருக்காக
என்பது
எனக்கு தெரியும்.
னக்குத் தெரிந்து
என்ன பயன் ?
தெரியவேண்டிய அந்த
தெய்வத்திற்கு
தெரியவில்லையே ! 

டந்தது நினைத்து 
கண் சிந்தாதே !

நிறைவான சந்தோசமும்
மிதமான கோபமும்
கடின உழைப்பும்
உதவும் மனமும்
உனக்குள் கொள்;
உலகம் உன்னைத் தன
தலையில் கொள்ளும்.

மூத்த மகன் நீ
பொறுப்புகளுக்கு மூத்த மகன்.
பற்றுகோல் நீ
உன் குடும்பத்திற்கு ...
தூணாக விளங்க வேண்டிய நீ    
துவண்டு விடக்கூடாது.
துணிந்து நில்
தூரங்கள் தூக்கிலிடப்படும்;
துன்பங்கள் துன்பப்படும்.

ந்நிகழ்வு கண்டு
வருந்தாதே!
சோகங்கள் மட்டும் தான்
பாடங்கள் புகட்டும்.
சொந்தங்கள்...
பந்தங்கள்...
நண்பர்கள்..
பகைவர்கள்...
அறிந்திருப்பாய் ...
அவர்களைப் பற்றி 
அனைத்தையும்
அறிந்திருப்பாய்.

நிலையான இந்த உலகில்
நிலையில்லாதது நம் வாழ்வு;
நிலையில்லாத வாழ்க்கையில்
நிலையான புகழைத் தேடு.

துன்பங்கள் உன்னைத் தொடும் போது ...
கண்ணை மூடு
கடவுளை நாடு
கவலைகள் விடு
கடமைகள் தொடு    
மனதின் வடு
என்னிடம் விடு 
மற்றவர்  துன்பங்களைத் தாங்கிக் கொள்ள 
நான் ஒன்றும் ஏசுபிரான் அல்ல ....
 
ருப்பினும் தாங்குகிறேன் ,
ஏனெனில் 
நீ எனக்கு மற்றவனல்ல !!!!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

   
Related Posts Plugin for WordPress, Blogger...