Thursday, March 8, 2012

கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ?

Copyright : Flickr

ன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது அந்தத் தேடுதல் வேட்டை . என் நண்பனின் தம்பிக்கு ( என் தம்பி எனவும் கொள்ளலாம்.) ஒரு மேல் சட்டை வாங்குவது அதன் நோக்கம். அதன் தளபதிகள் என் தாய் தந்தையர்; நான் போர் வீரன். அனைத்து அங்காடிகளையும் அலசி ஆராய்ந்த பின்பு மிஞ்சியது ... ஏமாற்றமே ! ஏனெனில்... தளபதிகளுக்கு இந்த வீரன் இட்டக் கட்டளை, " White or Black T-Shirt L size with reasonable prize and it should impress me " . அனைத்துக் கோட்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டாலும், " IMPRESS ME " என்னும் கோட்பாடு பூர்த்தி செய்யப்படாததால் மிஞ்சியது ஏமாற்றமே !

ம் ! நண்பர்களே , தாங்கள் கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ? ஞாபகம் இருக்கிறதா ?   எனக்குத் தெரியாது இந்தப் பரிசு கொடுக்கும் பழக்கத்தை எவன் ஏற்படுத்தியது என்று !  ( வேண்டுமென்றால் ஹாய் மதனிடம் கேட்கலாம் )  . அவன் எவனாக இருந்தாலும் , அவன் ஞானி. அகமகிழ்ச்சிக்கு வித்திடுபவர்கள் ஞானிகள். பரிசுகளும் அப்படியே , அகமகிழ்ச்சிக்கு வித்திடும் அருமருந்து.

ங்கு பெரும்பாலும், பரிசுகள் பணங்களால் வாங்கப்படுகின்றன. அவரவர் கையிருப்பை பொருத்தும், பின் வரும் லாபங்கள் நினைத்தும், பொருட்களின் இருப்பைப் பொருத்தும். இப்படியா பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ? எங்கு பரிசுகள் மனங்களால் வாங்கப்படுகின்றனவோ , அங்கு தான் பரிசுகளுக்குப் பரிசளிக்கப்படுகின்றது.

ரிசு என்பது வெறும் பொருள் அல்ல . அது கொடுப்பவனுடைய சுவாசம், பெருபவனுடைய உயிர். சுவாசம் எவ்வளவு தூய்மையானதோ ! விலைமதிப்பிலாததோ ! அது போல் நாம் தரும் பரிசுகள் இருக்க வேண்டும். அதைப் பெறுபவர் அந்த சுவாசத்தால் தான் பெற்ற உயிர் போல் அதை பாவிக்க வேண்டும் . இது நேர்ந்தால் அங்கு ஒரு உலகம் பிறக்கும். நட்பு உலகம்! பணமில்லாத, பேதமில்லாத, அன்பால் நிறைந்த நட்புலகம்.

ரிசுகள் இருவகைப்படும் . ஆடம்பரத்திற்காக .... உபயோகப்படுவதற்காக ... இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துத் தருவது புத்திசாலித்தனம். அதை உம்மால் தேர்வு செய்ய  இயலவில்லை என்றால், தாங்கள் அந்த நபருக்குப் பரிசளிக்கத் தேவையில்லை. ஏனெலில் ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் தரும் பரிசுகளும் வீணே ! அந்த உறவு நீடித்து நிலைக்கும் என்ற கற்பனையும் வீணே! பரிசுகள் எப்பொழுதும் குசேலனின் அவில் போல இருக்க வேண்டும். பிடித்தமானதாக; பயனுள்ளதாக.

நாம் வாங்கிய பொருட்களின் விலை தெரியக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி அதன் விலை அட்டையை அகற்றி விட சொல்கிறோம்.இது எதை மறைப்பதற்காக ?  சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய போலியான கவுரவத்திற்காக. உங்களைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர் என்றால், அந்தப் பரிசின் விலையை அவர் கண்டுகொள்ளப் போவதில்லை. " இது என்னால் முடிந்தது. இதில் பணத்தின் மதிப்பு குறைவானதாக இருக்கலாம்; ஆனால், அன்பு அளவுக்கதிகமாக இருக்கிறது  " என்று ,  எங்கு  உங்களால் பரிசளிக்க முடிகிறதோ , அங்கு தான் பரிசின் வீரமும், உங்கள் நட்பின் தீரமும் ஒளிந்திருக்கிறது.

பரிசளிக்கும் முன் சிந்திக்க வேண்டியவை :
  • முதலில் உங்கள் நண்பருக்கு எது தேவையென்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப பரிசளியுங்கள்.
  • உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மறக்காமல் அதைத் தேர்ந்தெடுங்கள். விலையின் அளவுகோல் கொண்டு ரசனையை அளக்காதீர்கள். 
  • விலைஅட்டையை நீக்காமல் பரிசளித்துப் பழகுங்கள்.
  • வழக்கமாக ... பிறந்தநாள், திருமண நாள் என பரிசளித்துப் பழகாதீர்கள். ஏனெலில் அது எதிர்பார்ப்பை வளர்த்து விடும். ஒரு சூழலில் உங்களால் பரிசளிக்க இயலவில்லை என்றால் தன் மீதுள்ள அன்பு குறைந்து விட்டதோ என உங்கள் நண்பர் நினைக்கத் தோன்றும். எனவே, ஆச்சரியமாக ! சம்பந்தமில்லாத நாட்களில் பரிசளியுங்கள். அது அந்த நாளையும் உங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
  • பரிசுகளோடு, அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் சிறுகுறிப்பில் எழுதி பரிசளியுங்கள். அது அன்பை மேலும் வலுப்படுத்தும்.
  • பொதுவாக கைக்குட்டை, பேனா போன்றவை பரிசளிக்கக்கூடாது என்னும் நம்பிக்கைகள் இருக்கின்றன. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள் .. தவறில்லை. அன்பானவர்களுக்கு மத்தியில் உலவும் சிறுமுட்டாள்த்தனம் அழகானவை.
  • கொடுத்த பரிசுகளை எந்தவொரு சூழலிலும் சொல்லிக்காண்பிக்காதீர்கள். அது, உங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்வது போல் அமையும்.
  • பரிசுகள் பற்றிய எதிர்பார்புகளை உருவாக்காதீர்கள். நீங்களும் எதிர்பார்க்காதீர்கள். ஆச்சரிய பரிசுகள் மட்டுமே அழகானவை! உயிரானவை !

பரிசுகள் அழகானவை. பரிசளிப்பவர்கள் அழகானவர்கள். பரிசு பெறுபவர்கள் பாக்கியவான்கள். வாருங்கள், இன்று முதல் பரிசளித்துப் பழகுவோம்.
  
சரி ! உங்களில் யார் எனக்கு முதல் பரிசு அளிக்கப்போகிறீர்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 1, 2012

தயவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !




முன் குறிப்பு : தன்னுடைய புகைப்படத்தை முகப்புத்தகம் மூலம் பகிர்ந்து கொண்ட நண்பர் சுதாகருக்கு எனது நன்றிகள் ! 

யவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !
யாருக்குத் தெரியும் - அடுத்தமுறை
உங்கள் மகனோ! மகளோ! வரும்பொழுது
காணாமல் போயிருக்கக்கூடும்
காயம் பட்ட கற்சிற்பங்கள் ;
காற்றின் காரணமாக - கொஞ்சம்
கவனக்குறைவின் காரணமாக !

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, February 10, 2012

♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥

Photo Courtesy : MUK Team
தாகம் தீர்க்கும்
துளி நீர் போல 
காமம் தீர்க்குமா
காதல் ? 



Photo Courtesy : http://nickstraffictricks.com


ன் 
செல்ல அதட்டல்களுக்கு
அடங்கிப் போகிறேன் 
அழகிய நாய்க்குட்டி போல ...


Photo Courtesy : motto.net.ua

  
நாட்காட்டியின் அத்தனை நாட்களும்
காதலர் தினமாய் ...
என்றோ ஓர் நாள் - அதை
நீ புரட்டிய காரணத்தினால் !


Copyright : http://hawaiiw.net


 ன்
சிறுசிறு சிணுங்கல்களில்
சிதறிப்போகும் என்னை !
சேர்த்து வைப்பது - உன்
முத்தங்களும்....
மௌனங்களும் ....


Copyright : http://slodive.com


டைசி நிமிட உறக்கம்
நம் காதல்
தொடரவும் முடியாமல் ....
பிரியவும் முடியாமல் ....



 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Tuesday, January 24, 2012

நிதர்சனம்

Copyright : Google


முகங்கள் முகங்கள் மறந்தேன் ;
முகப்புத்தகத்தில் தினமும் திரிந்தேன்.
யுகங்கள் யுகங்கள் அளந்தேன்;
பிஞ்சு இதழ்மொழி அறியேன்.

லகம் பெரிதாய் தெரிந்தது - என்
மகிழ்ச்சி அதுபோல் இருந்தது.
உலகம் சுருங்கிப் போனது - என்
மனமும் மழுங்கிப் போனது.

ண்மை சொன்னால் கசக்குது;
பொய்கள் எங்கும் சிரிக்குது.
காதல் கடையில் கிடைக்குது;
காசில் நட்பு பிறக்குது.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, January 7, 2012

ஏன் இந்தக் கொலைவெறி ?

Photo Courtesy : healthcareconsiderations.blogspot.com

குறிப்பு : சென்ற வருடம் என்னுடைய பழைய வலைப்பூவில் எழுதிய பதிவு, அதனை மறு பதிப்பு செய்கிறேன்.

அனைவருக்கும் முதற்கண் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 

சொந்த அலுவல் காரணமாக தொடந்து எழுத இயலாமைக்கு எனது வருத்தங்கள். வருடத்தின் முதல் பதிவு இவ்வாறு அமைய வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், காலத்தின் கட்டாயம் அதுவெனில் யாது செய்ய இயலும் .

ற்று நிதானமாகவும் நியாமாகவும் பார்க்க வேண்டிய விஷயம் தான் அண்மையில் அரங்கேறியிருப்பது. இரத்தக்கறைகள் படியாத செய்தித்தாள்கள் வருங்காலத்தில் வெளியாகாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு அச்சிடப்படாத ஆதாரம். மருத்துவர் ஒருவர், மதிகெட்ட மூடன் ஒருவனால் மரணத்திற்கு தள்ளப்பட்ட சம்பவத்தின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பீர்கள் ! அலசியிருப்பீர்கள் !

நான் பேசவிருப்பது ...
அதைப் பற்றியல்ல ; அதைச் சார்ந்திருப்பது பற்றி . ஆம், இத்தகைய சூழல் உருவாவதற்கு காரணம் சில அடிப்படைத் தவறுகளே ! தவறுகள் மக்களிடம் மட்டுமல்ல, அங்கங்கே  மருத்துவ சமூகத்திலும் புதைந்திருப்பது உண்மை தான் ! ( என்னுடைய மருத்துவ நண்பர்கள், என்னுடைய இக்கருத்துக்குக் குறைபட்டுக்கொண்டாலும், இதில் பொதிந்திருப்பது உண்மை என்பது அவர்கள் அறிந்ததே ! )

ருத்துவர்களின் தவறுகளில் சில ...

  • பல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் அறிவுமிக்க மருத்துவர்களை உருவாக்குகிறதே தவிர மனிதம் நிறைந்த மருத்துவனை உருவாக்க மறந்து விடுகிறது. வலிக்கான மருந்தை மட்டுமே பரிந்துரை செய்யும் எங்கள் படிப்பு, வலியின் வேதனையை ஒரு போதும் உணரச்செய்ததில்லை. ( இந்த 5 ஆண்டு கால படிப்பில், இதுவரை எந்தவொரு புத்தகமுமோ, பேராசிரியரோ நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை.)
  • தெரிந்தவரின் நோயாளி என்றால் முன்னுரிமை கொடுப்பதும், மிகவும் கவனத்துடன் கையாள்வதும், அதுவே அறியாத ஒருவர் என்றால் அலட்சியம் காட்டுவதும் நடைமுறையில் நடைபயின்று கொண்டு தான் இருக்கிறது. ( பிரிவினைக் கலாச்சாரம் ( Partiality ) மற்ற துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக , உயிரைக் காக்கும் இத்துறைக்கு அது அவசியம் தானா? )
  • பணத்தின் பின் மருத்துவம் பயணிக்க ஆரம்பித்து பலவருடம் ஆகிவிட்டது! இந்த மாற்றத்திற்கு காரணம் மருத்துவர்கள் மட்டுமல்ல, மக்களும் தான் ! தனியார் மயமாக்கல், வணிகமயமாக்கல், அரசியல் உள்ளீடுகள் அனைத்தும் இவற்றின் அடிப்படை நாதங்கள்!
  • தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்ளும் மெத்தனப்போக்கு ! மருத்துவன் என்ற நிலையில் இருந்து வழுவி, தன்னை ஒரு கடவுளாக பாவித்துக்கொள்ளும் பரிதாபச் செயல் ( விதிவிலக்குகள் வெகுசிலர் மட்டுமே ! )
  • ஒற்றுமையின்மை ! என் வீட்டு கூரை எரிகிற வரைக்கும் எனக்கு என்ன கவலை என்னும் சுயநல எண்ணம் ! ( மருத்துவர்கள் அவசியம் களைய வேண்டிய ஒரு குணம் ! இது அறிவுரையல்ல - காலத்தின் கட்டாயம் )

க்களின் அறியாமைகளில் சில ....

  • பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் மெத்தப்படித்தவர் ; அதிகம் அறிந்தவர் ; நம்மை விரைவில் நோயிலிருந்து விடுவிப்பார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கை .  ( அறிவு சார்ந்த அளவுகோலை பணத்தின் கைகளில் கொடுத்தது யார் ? இந்தச் சமூகம் தான். இலவசமாக வைத்தியம் பார்க்க நாங்கள் தயார் ! அப்பொழுது கூட நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் - ஓசியில வைத்தியம் பார்குறாரே ! நல்லா பார்ப்பாரா ? )
  • ஒத்துழைப்புத் தாருங்கள் ! மருத்துவர்களும் மனிதர்களே ! அவர்களுக்கும் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளும் வைக்கப்பெற்றிருக்கும் . ( புரியவில்லை என்றால் ஒருமுறை உங்கள் அருகில் உள்ள அரசு மருத்தவமனைக்கு சென்று வாருங்கள். நோயாளிகளை மருத்துவர்கள் நிந்திப்பதை மட்டும் கவனிக்காமல் அதன் அர்த்தத்தையும் அலசிப்பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு கட்டாயம் புரியும். )
  • அரசு மருத்தவமனைகளில் ஒழுங்கான மருத்தவம் செய்யப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கும் அறிவாளிகளே ! என்றேனும் ஒரு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் சரிவர வழங்கப்படுகின்றனவா ? நோயாளி, மருத்துவர், செவிலியர் விகிதாசாரம் சரியான அளவில் இருக்கிறதா என  யோசித்துள்ளீர்களா ? 
  • ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் ! ஒரு உயிர்க்கொல்லி (HIV) நோயாளியின் அருகில் அமர்ந்து நீங்கள் பயணம் செய்வீர்களா? ஆனால், அதே நோயாளிகளின் இரத்தத்தை நாங்கள் கையாள்வதும், அவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிப்பதும் நடைப்பெற்றுக் கொண்டுதானே இருக்கிறது ! அச்சமயம் ஏதோ ஒரு உதிரத்துளி எங்கள் கண்களிலோ, காயம்பட்ட எங்கள் கைகளிலோ தவறி விழுந்தால், தவறு செய்யாமலேயே நாங்கள் தண்டிக்கப்படுவோமே ! அதனை என்றேனும் யோசித்துள்ளீர்களா ? உங்கள் நோயைப் போக்குவதற்காக நாங்கள் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
  • கடவுளாக எங்களைத் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது எங்கள் கடமை. கடமை செய்பவர்களை முடிந்தால் பாராட்ட வேண்டுமே தவிர தொழக் கூடாது.

றுதியாக, அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Related Posts Plugin for WordPress, Blogger...