Showing posts with label கவி சிந்திய மைத்துளிகள். Show all posts
Showing posts with label கவி சிந்திய மைத்துளிகள். Show all posts

Tuesday, April 10, 2012

கவிதையாய் சில கிறுக்கல்கள்

மரண நாள்


Photo Courtesy : ifreewallpaper.com

ன் பார்வையால்
என்றோ எரிந்து விட்ட நான்
மறுபடியும் எரிக்கப்படுகிறேன் ! - இன்று எனக்கு
மரண நாள்.


முதல் எழுத்து

Photo Courtesy : http://prozailirika.ru

 யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.

தற்கொலை 


Photo Courtesy : midiaextra.com

ன்பே!
தற்கொலைக்கு நான் எதிரி தான்
இருந்தாலும் என்ன செய்ய …
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் – என் வார்த்தைகள்
அதைத் தானே செய்கின்றன.


கல்லறை

Photo Courtesy : bp6316 @ Flickr


ல்லுக்குள் ஈரம் – என்
காதலியின் கண்ணீர் – எனது
கல்லறையில்..

 மழைக்காதல்

Photo Courtesy : http://www.wallpapermania.eu

ன்றைய இல்லங்கள் அனுமதிக்கின்றன
காதலையும் மழையையும்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மட்டும்.



 -சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, March 17, 2012

அடுப்பங்கறை

Photo Courtesy : Gangadhara108@Flikr

சுடச் சுட இட்லி பரிமாறி - வர வர
சரியாவே சாப்பிடுறதே இல்ல - என
செல்லமாய் அதட்டி ...
சட்னி, சாம்பார் , மீன் குழம்புக்கு மத்தியில்
சடாரென்று தள்ளிவிட்டு ..
சத்தமில்லாமல் அடுப்பங்கறையில் நீ
சாப்பிடுவாயே ! - 'பழையது' *
அதில் உள்ளதம்மா
பலகோடி வருடங்களுக்கான பாசமும் ;
'நீ இன்னும் சாப்பிடலையா?' எனக் கேட்க மறந்த என்னுடைய பாவமும்.

*பழையது - முதல் நாள் செய்து மிஞ்சிய சாதம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, March 14, 2012

உயிர்ப்பார்வை


Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????

 my heart expecting this pic on ur blog wit your lines

thank you

with regards,
sarath 
 
 பிப்ரவரி 23 , Jackee Sarath இடம் இருந்து வந்த மின்னசல் வரிகள் இவை ! உங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா !


 
தீப்பற்றி எரியும் -  என்
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?

காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?

னி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?

ளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?

பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?

தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?

யிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?

ரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?

விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?

வையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 1, 2012

தயவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !




முன் குறிப்பு : தன்னுடைய புகைப்படத்தை முகப்புத்தகம் மூலம் பகிர்ந்து கொண்ட நண்பர் சுதாகருக்கு எனது நன்றிகள் ! 

யவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !
யாருக்குத் தெரியும் - அடுத்தமுறை
உங்கள் மகனோ! மகளோ! வரும்பொழுது
காணாமல் போயிருக்கக்கூடும்
காயம் பட்ட கற்சிற்பங்கள் ;
காற்றின் காரணமாக - கொஞ்சம்
கவனக்குறைவின் காரணமாக !

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, February 10, 2012

♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥

Photo Courtesy : MUK Team
தாகம் தீர்க்கும்
துளி நீர் போல 
காமம் தீர்க்குமா
காதல் ? 



Photo Courtesy : http://nickstraffictricks.com


ன் 
செல்ல அதட்டல்களுக்கு
அடங்கிப் போகிறேன் 
அழகிய நாய்க்குட்டி போல ...


Photo Courtesy : motto.net.ua

  
நாட்காட்டியின் அத்தனை நாட்களும்
காதலர் தினமாய் ...
என்றோ ஓர் நாள் - அதை
நீ புரட்டிய காரணத்தினால் !


Copyright : http://hawaiiw.net


 ன்
சிறுசிறு சிணுங்கல்களில்
சிதறிப்போகும் என்னை !
சேர்த்து வைப்பது - உன்
முத்தங்களும்....
மௌனங்களும் ....


Copyright : http://slodive.com


டைசி நிமிட உறக்கம்
நம் காதல்
தொடரவும் முடியாமல் ....
பிரியவும் முடியாமல் ....



 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Tuesday, January 24, 2012

நிதர்சனம்

Copyright : Google


முகங்கள் முகங்கள் மறந்தேன் ;
முகப்புத்தகத்தில் தினமும் திரிந்தேன்.
யுகங்கள் யுகங்கள் அளந்தேன்;
பிஞ்சு இதழ்மொழி அறியேன்.

லகம் பெரிதாய் தெரிந்தது - என்
மகிழ்ச்சி அதுபோல் இருந்தது.
உலகம் சுருங்கிப் போனது - என்
மனமும் மழுங்கிப் போனது.

ண்மை சொன்னால் கசக்குது;
பொய்கள் எங்கும் சிரிக்குது.
காதல் கடையில் கிடைக்குது;
காசில் நட்பு பிறக்குது.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Monday, December 19, 2011

விடைபெறுகிறேன் !



ன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து
நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

ந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

ன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

றவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

ன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

ப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

வி
டைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Tuesday, October 11, 2011

நட்பின் புதைகுழியில் !



தேவதையே !
நட்புத் தாரகையே !
காதல் தேவையோ ? - பொய்க்
காதல் தேவையோ ?

ழியெங்கும் நட்பின் சருகுகள்
மனமெங்கும் மிதிக்கும் உணர்வுகள்.
விழியெங்கும் காதல் அரும்புகள்
தினந்தோறும் மலரும் கனவுகள்.

ட்பின் காகிதம் கொடுத்து
காதல் எழுதிக் கொண்டோம்.
நட்பின் விரல் பிடித்து
காதல் பழகிக் கொண்டோம்
நட்பின் மலர் கொடுத்து
காதல் தொடுத்துக் கொண்டோம்
நட்பின் கைக்குட்டை வாங்கி
காதல் துவட்டிக் கொண்டோம்.
நட்பைப் புதைத்து விட்டு
காதல் பெற்றுக் கொண்டோம்.


காதல் தோழியே !
நட்பு மழை தந்தது;
காதல் துளி தந்தது.
நட்பு வயல் தந்தது;
காதல் நெல் தந்தது.
நட்பு தாகம் தீர்த்தது;
காதல் தாகம் தந்தது.

நாம்
நட்பு கிழித்துக்
காதல் உடுத்திக் கொண்டோம்.
காதல் கிழித்துக்
காமம் உடுத்திக் கொள்வோம்.

நாம்
கண்ணீர் குடித்து
தாகம் தீர்த்துக் கொண்டோம்.
கண்ணை விற்று
காட்சி வாங்கி வருவோம்.

ம் தோழி !
நம்முள் காதல் பிறந்திருக்கிறது ;
காதல்
காமம்
காயம்
மூன்றும் முளைத்திருக்கிறது
நட்பின் புதைகுழியில் !!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, October 8, 2011

பேருந்தில் தேவதை

Copyright : fotocommunity.com

பேருந்து நெரிசலில்
பக்கத்து இருக்கையில்
பளிச்சென்று தேவதை
பக்கத்தில் அவள் அன்னையோடு !

னியே சிரிக்கிறாள்
கேசம் கலைக்கிறாள்
கைநீட்டி அழைக்கிறாள்
மழலை மொழிகிறாள்
முத்தம் தருகிறாள்
கைபிடித்து இழுக்கிறாள்.

க்கம் பார்க்கிறாள்
கன்னத்தில் அறைகிறாள்
காதல் சொல்கிறாள்
கண்களில் கொல்கிறாள்

டைசியில் கேட்கிறாள் ...
" நான் UKG .... நீ ? "     


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, September 18, 2011

கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !

புத்தகம் 

Copyright : http://wallpaper4free.org

னக்கான வார்த்தைகள் மட்டும் சேர்த்து - ஒரு
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !

பசுமையாய் அவள்

Copyright : http://www.desktopwallpaperhd.net

காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் ! 


முதல் எழுத்து 

Copyright : besthomedecorators.com
யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.


ஒற்றை ரூபாய் 

Copyright : www.sparkthemagazine.com


ன்பே!
ஒற்றை ரூபாயாக 
உன் காதல் - நீ 
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது 
என் காதல்.

பின் குறிப்பு : * இத்தல் நிகழ்வு
                          ** இத்தல் நிகழ்வு.

உதடு 

Copyright : webs.com


ன்பே ! நீ 
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, September 13, 2011

களவாடிய கவிதைகள் !

Photo Courtesy : http://desigg.com

த்தி பூத்தாற்போல்
ரிதாய் பூக்கிறது 
அழகுப் பெண் பூக்கள்
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.

புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.

க்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...

யிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.

லர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?

காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்

லர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
கல்லறையில் சேர வேண்டும் - இல்லையென்றால்
கசங்கித்தான் தீர வேண்டும்.
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?

லர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.

காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Monday, September 5, 2011

நானாகிய நான் !

Copyright : Sathyaseelan

ன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .

றிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...

நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.

வி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.

நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .

நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....

உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?

வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் .... 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 


தொடும்தூரம் நீயில்லை !

Copyright : .tumblr.com
பல்லவி: 
தொடும்தூரம் நீ இல்லை ;
தொலைதூரம் தான் தொல்லை.
தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம்
தொட்டுப் பார்க்கிறதடி உன் கொலுசு.

சரணம்:1
முத்தம் கேட்டு இம்சித்ததில்லை - உன்னை
சத்தம் போட்டு வைததுமில்லை.
நித்தம் உன்னை நினைத்ததுமில்லை - நின்னை
நினைக்காத நாள் என் வாழ்விலில்லை.

சரணம்:2
முகம் பார்த்து பேசியதில்லை;
முகப்புத்தகத்திலும் பேசியதில்லை.
முல்லைப் பூவடி உன்னுதடு;
முத்தம் கேட்டு வாடுதடி என்னுதடு.

சரணம்:3
காலம் பிரித்து வைத்த காதல்;
காயம் தந்து வைத்த காதல்.
காமன் எட்டி நின்ற காதல்;
காலன் விட்டு நின்ற காதல்.

சரணம்:4
றக்கும்வரை காதல் வாழ்வதில்லை;
இறந்தபின்பு காதல் சாவதில்லை. - நான்
இருக்கும் நொடி காதல் வீழ்வதில்லை - உன்னை
எரிக்கும்நொடி காதல் காதலில்லை.


 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, September 3, 2011

தெரியாத முகங்களே !



தெரியாத முகங்களே !
தெரிகின்ற முகங்களே!
உண்மை தேடும் உணர்வில்லா விழிகளே !

ருக்கின்ற இறைவன் இருப்பது புரியுமோ ?
எரிக்கின்ற நாட்கள் எவனுக்கும் தெரியுமோ ?

ணங்கள் தேடும் மாமிசப்பட்சிகள்;
பிணங்கள் தின்னும் அதிசயப் பூச்சிகள்.

யிரின் உறைவிடம் ஒருவனும் அறியா ;
 உணர்ந்தவன் உலகினில் இருப்பது  தெரியா.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Thursday, August 18, 2011

தனிமையில் தோழனுடன் !!




முதலில் தோழி ஸ்ரீ பூர்ணாவிற்கு எனது நன்றிகள் ! ஒரு அழகான ஓவியம் அனுப்பி கவி எழத கூறியதற்கு ... இதோ தோழியின் மின்னஞ்சல் வரிகள் :

" Hi..........
          The blog is awesome and the poems r to the point and especially the poem between hand n  u to write a poem for Arun. Tat s totally coooool...... Great Job....... I request u to write few lines for tis favourite pic of mine.
Thank u."

ந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு உண்மை எனக்கு நினைவுக்கு வந்தது . ஆண்களுக்கு படைப்புத் தன்மை அதிகம் ; பெண்களுக்கு மட்டும் தான் ரசிப்புத் தன்மை அதிகம் . நன்றி தோழி ! இதோ உங்களுக்கான கவிதை .



ண்பி !
நட்பின் வழி காதல் மலரலாம் 
காதலின் வழி மணம் புரியலாம்
மணத்தின் வழி மழலை பேசலாம் 
மழலையும் ஒரு நாள் காதல் புரியலாம் !

த்தனையும் அறிந்தும்
ஆளில்லா அந்தியில்
தோளில் சாய்ந்து  
தொலைதூரம் தனிமையில்
வருகிறாயே ! பயமில்லையோ ?!

தொலைதூரம்...
தனிமை ....
திருமணம் ....
எதுவும் எனக்கு பயமில்லை !
காரணம்?


ட்பு  நம் மேல் கொண்ட நம்பிக்கையினால் !!!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Thursday, July 21, 2011

காதல் கொலை செய்யாதீர் !

Copyright -Wedding Photography | India@FB

தோழர் ராஜா அனுப்பிய  புகைப்படத்தில் காதலர்கள் மரத்தில் மரணம் செய்துக்  கொள்வது போல் இருந்தது. என்னுடைய கிறுக்கல்100 நண்பர்கள் இளகிய மனம் உடையவர்கள் என்பதாலும் , மேலும் காதலர்களின் அத்தகைய முடிவை நான் விரும்பாததாலும் அதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மன்னிக்கவும் ராஜா. தோழர் அனுப்பிய புகைப்படுத்துக்காக நான் கிறுக்கிய வரிகள்.


காதல் 
கொலை செய்யப்படுகின்றன 
மணக்கயிறுகளால் மற்றும்
பிணக்கயிறுகளால் ... 



- சத்தியசீலன் @கிறுக்கல்கள்100 


Friday, July 15, 2011

மும்பை தீவிரவாதம் - கசாப் தூக்கு - கண்ணீர்க் கவிதை

Photo Courtesy - medinab.blogspot.com


குறிப்பு : மும்பை குண்டுவெடிப்பில் உயிரிழந்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இக்கண்ணீர்க்கவிதை சமர்ப்பணம். அதோடு கசாபைத்  தூக்கிலிட்ட இத்தருணத்தில் இக்கவிதையை மறுபதிப்பு செய்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டுமானால் எனக்கு என்றுமே மரண தண்டனையில் உடன்பாடு இல்லை. அப்படி ஒருவனைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்றால் , இதுவரை தவறே செய்யாத ஒருவன் மூலம் அவனைத் தூக்கிலிடச் செய்யுங்கள்.


தீவிரவாதப் பேயடா ! - நீ
திருந்தும் வழியேதடா ?
தீர்க்கமாய் சொல்லி செல்லடா - இல்லை
திருகிக் குடிப்போம் உன் உயிரடா !

வெட்டி சாய்த்துவிட வேண்டுமடா - உன்
நெஞ்சில் ஈரம் பட்டு போய் விட்டதடா !
கண்ணீர்த்துளி கேட்கும் நரமாமிசா - உன்
கண்ணை வெட்டி நீயும் நீர் குடிடா !

யிரின் மகத்துவம் நீ பாரடா - உன்
உயிரைக் கொண்டு போராடடா !
வாதங்கள் செய்து வாழாதடா - உன்
தீவிர வாதங்கள் விழல் தானடா !

ழலைக் கொண்டாடும் தேசமடா - இது
உயிரைக் குடிக்கும் தேசமடா !
அரசியல் வணிகம் நடக்குதடா - தினமும்
அறிக்கை மட்டும் கேட்குதடா !

தவிகள் தந்தது மக்களடா
பாடையில் இருப்பதும் மக்களடா
உரிமைகள் தந்தது மக்களடா
உயிரைக் கொடுப்பதும் மக்களடா !

காந்தியம் பிறக்க மறந்ததடா - காந்தி
நோட்டுகள் பிணங்கள் கேட்குதடா !
சாந்திகள் இல்லா நாடடா - என்
சந்ததிக்கு ஏது வழியடா !

கிம்சை தந்த  நாடடா - அது
னுதினமும் அழுவது ஏனடா !
ஒருமுறை சிந்தித்து பாரடா - எங்கள்
உயிரைக் குடிப்பது ஏனடா !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 

Friday, July 1, 2011

நீயும் வீணே !

COPYRIGHT : Carol VanHook


ன்னில் பெரியவனும் இல்லை;
உன்னில் சிறியவனும் இல்லை.
உறுப்படியான இவ்வுலகில் உனக்கு
உறுப்படியாய் எதுவும் இல்லை.

பிறப்பது ஓர் நாள்
இறப்பது ஓர் நாள் -மற்றவை 
எல்லாம் உன் வாழ்நாள்.
பிறக்கையில் பிறந்தாய்
இறக்கையில் இறந்தாய்
இருப்பதில் என்ன இழந்தாய்.

கொடுக்காத கை வீணே ! - கொடுப்பதைக் கண்டு
ரசிக்காத கண் வீணே !  
சிரிக்காத முகம் வீணே - பிறரை 
அணைக்காத நீயும்  வீணே !

ர்ணன் பற்றிப் பேசுகிறாய் 
கடையேழு பற்றி பேசுகிறாய்
காலம் காலமாய் பேசுகிறாய்
கொடுப்பதில் மட்டும் யோசிக்கிறாய்

பிச்சை இட்டவன் இறைவன் 
பிச்சை பெற்றவன் மனிதன்
பிச்சை கேட்பவன் "மனிதன்"
பிச்சையிட்டால் நீ இறைவன்.

மாறுமோ உன் மனம்!
தீறுமோ தீ குணம்!
சேருமோ நல் மனம்!
வாய்க்குமோ விண் குணம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
 

Wednesday, June 29, 2011

இவைகள் காதல் சொல்லும் கவிதைகள்

Copyright : favim.com

ன் அத்தனைத்
தவறுகளுக்குமான ....
மன்னிப்பு
உன் காதல்


Copyright : weheartit.com

ன்பே !
உன்
பார்வைக் கவிதைகளுக்காக
பத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்
இதய வெற்றுக்காகிதங்கள்.
  



ம் கண்களின் கல்யாணத்திற்கு - ஏனடி
என் இமைகளுக்கு விவாகரத்து...
சேர்த்து வைத்துவிடு  - நம்
முதலிரவில் அல்லது - என் 
முடிவிரவில்.


Copyright : photoblog.subpixel.eu

சுண்ணாம்பு அடிக்காமல் 
சுவற்றுச் சித்திரமாய் 
பாதுகாக்கப்படும் - என் 
சிறுவயதுக் கிறுக்கல்களாய் ...
உன் நினைவுகள் !



Copyright : http://www.fotokanal.com

ன்னவள்
வெட்டி
விட்டெறிந்த 
விரல் நகம் தான்- வானத்தின்
பிறை நிலவோ!!!


Copyright : Flickr


து !
என்னவோ தெரியவில்லை
காதல் கவிதைகள் எழுதும்
பேனாக்கள் மட்டும் 
நிரப்பப்படுகின்றன ....
காதலனின்
கண்ணீர் கொண்டு !!! 
  

Copyright : Flickr

பார்த்து செல்லடி - என் இதய சாலையில் 
பள்ளங்கள் பலவிருக்கும் - உன்னைப்
பார்த்து பார்த்து காதல் செய்ததால் !!



Copyright : Flickr


ன் உதட்டை பூட்டுகின்ற
உன்னத சாவி
அவள்  விழிகள்.

Copyright : Favim.com


ன்பே!
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.



Copyright : http://hdwallpaper9.com


ரோஜா இதழ் கூட சற்று கடினம் தான் ...
உன் இதழை ஒப்பிடுகையில்!
னித்துளியில் மறைந்திருக்கும் ரோஜா இதழ்கள் ;
நீ சற்று அனுமதி தந்தாள் ..
என் இதழ் பனியில் மறையும் உன் ரோஜா இதழ்கள் !!


Copyright : newpip.blogspot.com

ன்பே
மோதல்கள்  சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 

Sunday, June 26, 2011

ஜனனம்

Photo Courtesy : Arun

குறிப்பு எனது நன்றிகள் தோழர் அருண் அவர்களுக்கு .... அவர் அனுப்பிய புகைப்படத்திற்கு நான் எழுதிய வரிகள் .


றக்கப் போகும்
இரு ஜீவன்
இரக்கமில்லாமல்
இறப்பதற்காக
இன்னொரு ஜீவனை
ஈன்றெடுக்கும்
இன்பவிழா
ஜனனம் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...